அண்மைய செய்திகள்

recent
-

பெருங்குடல் புற்றுநோய் யாருக்கெல்லாம் வரும்? வெளிப்படுத்தும் முக்கிய அறிகுறிகள் -


பெருங்குடல் புற்றுநோய் வந்தால் குடலின் உட்புறத்தில் தோன்றி பெருங்குடல் முழுவதுமாக பரவி மலக்குடல் வரை அதன் தாக்கத்தை உண்டாக்கும்.
அனைத்து நோய்களையும் போலவே இந்த பெருங்குடல் புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டுபிடித்து விட்டால் குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது.
பெருங்குடல் புற்றுநோய் முக்கிய அறிகுறிகள்
  • திடீரென எதிர்ப்பாராத வகையில் உடல் எடை குறைந்தால், பெருங்குடல் புற்று நோய்க்கான அறிகுறிகள் என அறியலாம்.
  • வயிற்றுப்போக்கு, குமட்டல் போன்ற பிரச்சனைகள் தொடரந்து இருந்தால் இந்த அறிகுறிகள் இருந்தால் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
  • சிறுநீர் கழித்தவுடன், வயிற்று பகுதியில் மீண்டும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியபடியே இருந்தால் இந்த அறிகுறிகள் புற்று நோய்க்கான அறிகுறிகளாக அமையலாம்.
  • சிறுநீரகம் இரத்த நிறத்தில் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.ஏனெனில் இதுவும் பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
  • தசை பிடித்தல், வயிற்று பகுதியில் வலி ஏற்படுதல், எந்நேரமும் சோர்வாகவும், பலவீனமாகவும் தோன்றினால் ஆகியவையும் பெருங்குடல் புற்றுநோய்கான அறிகுறிகள் ஆகும்.
  • இது போன்ற பல அறிகுறிகள் இந்த பெருங்குடல் புற்றுநோய்க்கு ஏற்படும். எனவே கவனமாக இருப்பது நல்லது.
யாருக்கெல்லாம் பெருங்குடல் புற்றுநோய் வரும்?
  • நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
  • பெருங்குடல் புற்றுநோய்க்கு வயதும் மிக முக்கியக் காரணியாக செயல்படுகிறது. அதனால் 90% பேருக்கு 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோயின் பாதிப்பு ஏற்படும்.
  • புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு 14 சதவிகிதம், உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 30 சதவிகிதமும் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து உள்ளது.
  • மதுவை அதிகம் குடிப்பவர்கள், உடற்பயிற்சி மேற்கொள்ளாதவர்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பவர்கள் ஆகியோருக்கு பெருங்குடல் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
எப்படி கண்டுபிடிப்பது?
  • உடல் இயக்க மாற்றம், தொடர் வயிற்றுப்போக்கு, மலத்தில் இரத்தம் படிதல், மலச்சிக்கல், எடை குறைவது போன்ற பல அறிகுறிகள் இந்த நோய்க்கு உள்ளதால் கவனமாக இருப்பது நல்லது.
  • கோலனோஸ்கோப்பி, சிக்மாய்டோஸ்கோப்பி, சி.டி கோலனோகிராஃபி போன்று பல்வேறு முறைகளில் இந்த நோய் தாக்கம் இருப்பதை உறுதி செய்யலாம்.
  • சீரான இடைவெளிகளில் பெருங்குடல் புற்றுநோய் பரிசோதனைகள் செய்துகொள்வதன் மூலம், புற்றுநோய் செல்களை அவை கேன்சராக மாறும் முன்னரே கண்டுபிடித்து அகற்றி விடலாம்.
  •  
பெருங்குடல் புற்றுநோய் யாருக்கெல்லாம் வரும்? வெளிப்படுத்தும் முக்கிய அறிகுறிகள் - Reviewed by Author on November 16, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.