மன்னார் மாவட்டத்தில் கணிதப்பிரிவில் முதல் இடம்-
நடந்து முடிந்த 2018ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப்பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரி மாணவன் செல்வன் S.அன்று பேடினன் கணிதப்பிரிவில் 1ம் மெரிட் இடத்தினைப்பெற்றுள்ளார்.
திரு.S.செல்வம் திருமதி செல்வம் மேரி ரோசா தம்பதிகளின் புதல்வன் செல்வன் S.அன்று பேடினன் மாவட்ட நிலையில் முதலிடத்தினையும் மெரிட் தேசிய ரீதியில் 546ம் இடத்தினையும் பெற்று மன்னார் மண்ணிற்கு பெருமைசேர்த்துள்ளார்.
அவரிடம் உங்களது எதிர்கால இலக்கு என வினவியபோது.......
எதிர்கால இலக்கு-சிறந்த இலத்தரனியல் பொறியிலாளர் - ELECTRICAL INGINEER வருவதே என்றார். எனது கல்விச்செயற்பாட்டிற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர் ஆசிரியர்கள் அதிபர் நண்பர்கள் எல்லாவற்றிக்கும் மேலான ,இறைவனையும் நினைவில் கொள்கின்றேன்..
செல்வன் S.அன்று பேடினன் இம்மாணவனை நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்.
தொகுப்பு-வை.கஜேந்திரன்-
கணிதப்பிரிவில் S.அன்று பேடினன்-மன்னார் மாவட்டத்தில் முதல் இடம்- படம்
Reviewed by Author
on
December 30, 2018
Rating:
No comments:
Post a Comment