அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கறிற்றாஸ்-வாழ்வுதய சர்வமத நல்லிணக்ககுழு திருகோணமலையில்---முழுமையான படங்கள்

மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய நிறுவனத்தினால் நடை முறைபடுத்தப்படுத்தப்பட்டு வரும் சர்வமத செயற்பாடுகளின் ஒரு பகுதியான மதத்தலைவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வு திங்கள் கிழமை 03-12-2018 மன்னாரில் இருந்து சமயநல்லிணக்ககுழுவானது வாழ்வுதய இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார் தலைமையில் இரண்டு நாள் (03-12--2018-04-12-2018)திருகோணமலை பயணமானது.
திருகோணமலை மாவட்ட வாழ்வுதயம் பொதுமண்டபத்தில் இடம் பெற்றது.
இவ் நிகழ்வுக்கு விசேட அழைப்பை ஏற்று திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கலந்து கொண்டார் அவருடன் இணைந்து குறித்த நிகழ்வில் இரத்தினபுர-திருகோணமலையை சோர்ந்த சர்வமதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வமத பிரதி நிதிகள்  மற்றும் மன்னார் மாவட்ட சர்வமத பிரதி நிதிகள் அரச ஊழியர்கள், மற்றும் ஏனைய சர்வ மத பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
சமய தலைவர்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கான  அறிமுக நிகழ்வும் அதனை தொடரந்து கருத்துக்களை பரிமாரிக் கொள்ளும் நிகழ்வும் இறுதியில் பொது கலந்துரையாடல்களும்  இடம் பெற்றது.

நிகழ்வின் மேலதிக செயற்பாடாக சர்வமத செயற்திட்டத்தின் நோக்கம் தொடர்பாகவும், கடந்த காலங்களில் செயற்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மூலம் அடையப்பட்ட விளைவுகள் தொடர்பான கலந்துரையாடல் நடாத்தப்பட்டதுடன் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகளுக்கான திட்டமிடலும், ஆலோசனையும் இடம் பெற்றது.

திருகோணமலை மவட்டத்தில் மத ரீதியாக பிரசித்தி பெற்ற இடங்களான
  • திருக்கோணஸ்வரக்கோவில்
  • வெல்கம் ரஜ விஹாரை
  • மஸ்ஜீதுல் ஹீலூர் பள்ளிவசல்
  • புனித மரியாள் பேராலயம்
  • வெந்நீர் ஊற்றுகினறு-கிண்ணிய
விசேட விதமாக திருகோணமலை மூதூர் சம்பூர் கிராமக்களை சந்தித்ததும் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலைகலாச்சார நிகழ்வுகளில் கலந்துகொண்டு அவர்களின் வாழ்வியல்(03முறை மீள்குடியேற்ற்ம்)அறிந்து கொண்டமையும் அங்குள்ள மாணவர்களுக்கான சிறிய அன்பளிப்பினை இரத்தினபுர சமயநல்லிணக்க குழு வழங்கியது சிறப்பான நிகழ்வுகளாக அமைந்தது.

சமயநல்லிணக்கச்செயற்பாடுகள் இவ்வாறு தொடர்ச்சியாக நடைபெற்றுவருவதால்  நான் இந்து முஸ்லீம் கிறிஸ்ரியன்.பௌத்தன் என்ற வேறுபாடு இல்லாமல் நாம் அனைவரும் மனிதர்கள் என்ற எண்ணம் மேலோங்க வேண்டும்.
சமயங்கள் போதிக்கின்ற அன்பு-பக்தி-இரககம்-நேர்மை-உண்மை நல்ல பண்பு நல்லபழக்கவழக்கங்களை கடைப்பிடித்து வாழ்வதன் மூலமும் எம் ஒவ்வொருவரின் உள்ளத்தில் ஏற்படும் மாற்றம் தான் உண்மையான சமயநல்லிணக்கத்துக்கும் சமாதானத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இவ்வாறான சந்திப்புக்கள் மூலம் சாத்தியமாகின்றது.சமயநல்லிணக்கம்.

-வை.கஜேந்திரன்-






















































மன்னார் கறிற்றாஸ்-வாழ்வுதய சர்வமத நல்லிணக்ககுழு திருகோணமலையில்---முழுமையான படங்கள் Reviewed by Author on December 05, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.