அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-கலைப்பிரிவில் J.மேரி வினோதினி-படம்


மன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-கலைப்பிரிவில்
நடந்து முடிந்த 2018ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப்பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மன்னார் மாவட்ட வங்காலை புனித ஆனாள் பாடசாலையின் மாணவி செல்வி  J.மேரி வினோதினி கலைப்பிரிவில் 1ம் இடத்தினைப்பெற்றுள்ளார்.

திரு.ஜெசீலன் சில்வா திருமதி ஜெ.சுதாஜினி தம்பதிகளின் புதல்வி செல்வி J.மேரி வினோதினி மாவட்ட நிலையில் முதலிடத்தினையும் தேசிய ரீதியில் 105ம் இடத்தினையும் பெற்று மன்னார் மண்ணிற்கு பெருமைசேர்த்துள்ளார்.

அவரிடம் உங்களது எதிர்கால இலக்கு என வினவியபோது.......
எதிர்கால இலக்கு-சிறந்த சட்டத்தரணியாக வருவதே என்றார்.எனது கல்விச்செயற்பாட்டிற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர் ஆசிரியர்கள்  அதிபர் நண்பர்கள் எல்லாவற்றிக்கும் மேலான ,இறைவனையும் நினைவில் கொள்கின்றேன்..
J.மேரி வினோதினி இம்மாணவியை நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்.

தொகுப்பு-வை.கஜேந்திரன்- 
மன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-கலைப்பிரிவில் J.மேரி வினோதினி-படம் Reviewed by Author on December 30, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.