பட்டிருப்பு வலயக் கல்வி பணிப்பாளர் கடமையேற்றார்! -
மட்டக்களப்பு, பட்டிருப்பு வலயக் கல்வி பணிப்பாளராக ந.புள்ளநாயகம் தனது கடமையை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னாள் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர். சுகிர்தராஜன் தனது 32 வருடகால கல்விச் சேவையிலிருந்து 60வது வயதில் கடந்த 09ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஓய்வு பெற்றிருந்தார்.
ஓய்வு பெற்ற ஆர். சுகிர்தராஜனுக்கு முன்பாக பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றி பின் திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளராக செயற்பட்ட துறைநீலாவணையினை சேர்ந்த ந.புள்ளநாயகம் தற்போது பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளராக இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
இவர் கடந்த காலத்தில் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக நியமிக்கப்பட வேண்டுமெனவும் இவரே கல்வி நிர்வாக சேவையில் உள்ள சிரேஷ்ட அதிகாரி எனவும் குறிப்பிடபட்ட நிலையில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கான நியமனம் தடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பட்டிருப்பு வலயக் கல்வி பணிப்பாளர் கடமையேற்றார்! -
Reviewed by Author
on
December 12, 2018
Rating:
No comments:
Post a Comment