அண்மைய செய்திகள்

recent
-

நேசகரம் நீட்டும் கூட்டமைப்பு? ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகள் -


ரணிலை பிரதமராக நிமியக்க கோரி ஐக்கிய தேசிய முன்னணியால் கொண்டுவரப்படும் நம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவாக 117 வாக்குகள் கிடைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ரஜகருணா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த பிரேரணைக்கு ஆதரவாக மக்கள் விடுதலை முன்னணி வாக்களிக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“ரணிலை பிரதமராக நிமியக்க கோரி ஐக்கிய தேசிய முன்னணியால் நாளை நம்பிக்கை பிரேரணை ஒன்று கொண்டுவரப்படவுள்ளது. இந்த பிரேரணைக்கு ஆதரவாக 117 வாக்குகள் கிடைக்கும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த பிரேரணையை ஆதரித்து வாக்களிக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. எனினும், மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்காது என தெரிகின்றது.
நாடாளுமன்றில் இருக்கும் 225 உறுப்பினர்களின் எண்ணிக்கை முழு நாட்டையும் குறிக்கும்.

இந்நிலையில், 225 உறுப்பினர்கள் கோரினாலும் ரணிலை பிரதமராக்க மாட்டேன் என ஜனாதிபதி கூறுவது, இந்த முழு நாட்டு மக்களையும் மதிக்க மாட்டேன் என்று கூறுவதற்கு சமன்” என ஹர்சன ரஜகருணா மேலும் தெரிவித்துள்ளார்.
நேசகரம் நீட்டும் கூட்டமைப்பு? ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகள் - Reviewed by Author on December 12, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.