அண்மைய செய்திகள்

recent
-

பொறியியல் தொழில்நுட்பம் பிரிவில்-R.சரண் அபிஷேக் குரூஸ் மன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-படம்

மன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-பொறியியல் தொழில்நுட்பம் பிரிவில்

நடந்து முடிந்த 2018ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப்பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய  மாணவன்  செல்வன் R.சரண் அபிஷேக்  குரூஸ் பொறியியல் தொழில்நுட்பம் பிரிவில்  1ம்  இடத்தினைப்பெற்றுள்ளார்.

திரு.லெஸ்லி றெஜினோல்ட் குரூஸ் திருமதி R.செபஸ்ரின் குயினி லெம்பேட்  தம்பதிகளின் புதல்வன் செல்வன் R.சரண் அபிஷேக்  குரூஸ் மாவட்ட நிலையில் முதலிடத்தினையும்  தேசிய ரீதியில் 456ம் இடத்தினையும் பெற்று மன்னார் மண்ணிற்கு பெருமைசேர்த்துள்ளார்.


அவரிடம் உங்களது எதிர்கால இலக்கு என வினவியபோது.......

எதிர்கால இலக்கு- ICT துறையில் சிறந்த நிபுணராக வருவதே என்றார். எனது கல்விச்செயற்பாட்டிற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர் ஆசிரியர்கள்  அதிபர் நண்பர்கள் எல்லாவற்றிக்கும் மேலான ,இறைவனையும் நினைவில் கொள்கின்றேன்..

செல்வன்  R.சரண் அபிஷேக்  குரூஸ் இம்மாணவனை நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்.

"முழுமையான விபரங்களுக்கு காத்திருங்கள்"
 -தொகுப்பு- வை-கஜேந்திரன்-

பொறியியல் தொழில்நுட்பம் பிரிவில்-R.சரண் அபிஷேக் குரூஸ் மன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-படம் Reviewed by Author on December 31, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.