அண்மைய செய்திகள்

recent
-

மாந்தை மேற்கில் பாடசாலை மாணவர்கள் 250 பேரூக்கு கற்றல் உபகரணங்களை தமிழீழ விடுதலை இயக்கம் வழங்கி வைப்பு-(படம்)

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுற்குற்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மணவர்கள் 250 பேரூக்கு தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) இன்று வியாழக்கிழமை பாடசாலை கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளனர்.

-லண்டனைச் சேர்ந்த யோகன் மற்றும் பகி ஆகியோரின் நிதி பங்களிப்புடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

-மாந்தை மேற்பு பிரதேசச் செயலாளர் பிரிவில் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 8 பாடசாலைகளைச் செர்ந்த 250 மாணவர்களுக்கு குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

-தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள்,கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு குறித்த கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








மாந்தை மேற்கில் பாடசாலை மாணவர்கள் 250 பேரூக்கு கற்றல் உபகரணங்களை தமிழீழ விடுதலை இயக்கம் வழங்கி வைப்பு-(படம்) Reviewed by Author on January 25, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.