அண்மைய செய்திகள்

recent
-

மடு சந்தியில் அமைக்கப்பட்ட பாரம்பரிய உணவகம் வைபவ ரீதியாக திறந்து வைப்பு-படம்

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,மடு சந்தியில் அமைக்கப்பட்ட பாரம்பரிய உணவகம் இன்று வெள்ளிக்கிழமை காலை வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

 மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் மடுச் சந்தியில் வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் அமைக்கப்பட்ட பாரம்பரிய உணவகம் இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பாரம்பரிய   உணவகத்தினை கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் அழைப்பின் பெயரில் வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன்  அவர்களால்  திறந்து வைக்கப்பட்டது.

இதன் போது  நானாட்டான் பிரதேச சபைத்தலைவர், மடு பிரதேச செயலாளர் , கிராம அபிவிருத்தி , மாவட்ட உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மடு கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாச உறுப்பினர்கள் அக்கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 








மடு சந்தியில் அமைக்கப்பட்ட பாரம்பரிய உணவகம் வைபவ ரீதியாக திறந்து வைப்பு-படம் Reviewed by Author on January 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.