அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தின் ஏற்பாட்டில்-பாடசாலை உபகரணங்கள் கையளிப்பு-படங்கள்

மன்னார் மாவட்ட 'காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கம்' மற்றும் 'பெண்கள் மற்றும் சிறுவர்களை மேம்படுத்தும் குடும்பங்களின் சங்கம்' ஆகியவை இணைந்து மன்னாரில் இன்று (31) திங்கட்கிழமை பாடசாலை மாணவர்களுக்கான ஒரு தொகுதி பாடசாலை மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளனர்.

-மன்னார் நகர சபை மண்டபத்தில்31-12-2018  திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.

இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிள்ளைகள்,அரசியல் கைதிகளின் பிள்ளைகள் மற்றும் வறிய மாணவர்கள் என 252 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

தென்பகுதியில் உள்ள பொது அமைப்புக்கள் பாதனிகளை வழங்கியுள்ளதோடு,அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பாடசாலை உபகரணங்களை வழங்கியுள்ளனர்.

குறித்த நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்,தென்பகுதியில் உள்ள பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பிரதி நிதிகள்,பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது மாணவர்களினால் பல்வேறு நிகழ்வகள் அரங்கேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.









மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தின் ஏற்பாட்டில்-பாடசாலை உபகரணங்கள் கையளிப்பு-படங்கள் Reviewed by Author on January 01, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.