மன்னாரில் முன்மாதிரியாக செயல் பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் (படம்)
புத்தாண்டு தினமான இன்று செவ்வாய்க்கிழமை (1)மன்னார் பொது வைத்திய சாலையில் சுகயீனமுற்று தங்கியிருக்கும் நோயாளர்களை நேரில் சென்று வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பார்வையிட்டு உதவிகளையும் வழங்கி வைத்துள்ளார்.
வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும்,கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியோக செயலாளருமான றிப்கான் பதியுதீன் நேரில் சென்று
பார்வையிட்டார் .
இதன்போது விடுதிகளில் தங்கியிருக்கும் நோயாளர்களுக்கு புது வருட வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, அவர்களுக்கு அன்பளிப்பையும் வழங்கி வைத்தார்.
குறித்த சம்பவம் அனைவர் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மன்னாரில் முன்மாதிரியாக செயல் பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் (படம்)
Reviewed by Author
on
January 02, 2019
Rating:
No comments:
Post a Comment