அண்மைய செய்திகள்

recent
-

புகழ் பெற்ற இந்து ஆலயங்களை புனித பிரதேசமாக்க விரைவில் அமைச்சரவை பத்திரம்-திருகேதிஸ்வரத்தில் அமைச்சர் மனோகனேசன் தெரிவிப்பு

இலங்கை முழுவதும் உள்ள புகழ்பெற்ற மற்றும் வரலாற்று பழமை வாய்ந்த இந்து ஆலயங்கள் சில வற்றை புனித ஸ்தலங்களாக மாற்றுவதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்றை விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்க உள்ளதாக 23-01-2019 இன்றைய தினம் திருகேதிஸ்வரத்தில்  இடம் பெற்ற ஒன்று கூடலின் போது அமைச்சர் மனோகனேசன் தெரிவித்தார்

இந்து விவகார அமைச்சராக பதவி பிரமாணம் செய்ததை தொடர்ந்து  இலங்கையில் உள்ள பாடல் பெற்ற அனைத்து ஸ்தலங்களுக்கும் சென்று அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடி வருகின்றார்

இந்த நிலையில் 23-01-2019 இன்று காலை மன்னார் திருகேதிஸ்வர ஆலயத்திற்கு நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்ட போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில் திருக்கேதிஸ்வர பகுதிக்கு சொந்தமான ஆனலும் இன்னும் வழங்க்கப்படாத காணிகள் அனைத்தையும் மக்களின் பாவனைக்கும் ஆலய பாவனைக்கும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிதார்

அத்துடன் குறித்த அமைச்சரவை பத்திரத்தினை சமர்பிக்கும் போது அனைவரும் அனைத்து பாரளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் மக்கள் பிரதி நிதிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் தெரிவித்தார்
 மேலும் தற்போது இந்தியாவின் நிதி உதவியுடன் நடை பெற்று வரும் அபிவிருத்தி மற்றும் கட்டுமான பணிகள் தொடர்பான விபரங்களையும் கேட்டறிந்தார்

குறித்த நிகழ்வில் தேசிய அரச கரும மொழி அமைச்சின் மேலதிக செயலாளர் திரு.ரவீந்திரன் அவர்களும் இந்து விவகார அமைச்சின் பனிப்பாளர் உமா மகேஸ்வரன் அவர்களும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் திரு.பாஸ்கர் அவர்களும் வடமாகண இனைப்பாளர் மற்றும் மாவட்ட இணைப்பாளர் பாஸ்கர் மற்றும் தீபன் மரிய சீலன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.












புகழ் பெற்ற இந்து ஆலயங்களை புனித பிரதேசமாக்க விரைவில் அமைச்சரவை பத்திரம்-திருகேதிஸ்வரத்தில் அமைச்சர் மனோகனேசன் தெரிவிப்பு Reviewed by Author on January 23, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.