அண்மைய செய்திகள்

recent
-

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் பொங்கல் கொண்டாட்டம்

கடந்த மாதம் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட உழவனூர் மக்களுடன் மன்னார் சமூக மேம்பாட்டுக்கான நிறுவனத்தினர் இணைந்து பொங்கள் நிகழ்வுகளை கொண்டாடியுள்ளனர்

350 குடும்பங்களை கொண்ட குறித்த கிராமத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டு நலன்புரி முகாம்கள் பாடசாலைகள் என தற்காலிகமாக இடம் பெயர்ந்தனர் அனேகமான மக்களின் வயல்கள் தோட்டங்கள் கால்நடைகள் என பெரும் பாதிப்பு அடைந்திருந்தது
இந்த நிலையில் கடந்த வாரம் மன்னார் மாவட்ட சமூக மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஊடக குறித்த மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது அத்தோடு பொங்கள் பண்டிகைகான பொருட்களும் விசேடமாக வழங்கி வைக்கப்பட்டது

இந்த நிலையில் குறித்த மக்களின் அழைப்பின் பெரில் இன்றைய தினம் உழவனூர் மக்களுடன் இணைந்து 2019 ஆண்டுக்காண பொங்கள் நிகழ்வு காலை 10.30 மணியளவில் உழவனூர் பொது நோக்கு மண்டபத்தில் இடம் பெற்றது

குறித்த நிகழ்வில் MESDO-மன்னார் சமூக மேம்பட்டுக்கான நிறுவனத்தில் தலைமை அதிகாரி ஜாட்சன் உழவனூர் கிராம சேவகர் சமூர்த்தி உத்தியோகஸ்தர்கள் அரச அதிகாரிகள் மெசிடோ நிறுவன ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 

















வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் பொங்கல் கொண்டாட்டம் Reviewed by Author on January 16, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.