அண்மைய செய்திகள்

recent
-

அடம்பன் கீலிக்கரையான் கடற்பகுதியில் 820 KG பீடி சுற்றும் இலைகளைக் கொண்ட பொதிகள் மீட்பு-படங்கள்

மன்னார்-அடம்பன் பொலிஸ் பிரிவில் சுமார் 820 கிலோ கிராம் நிறை கொண்ட பீடி சுற்றும் இலைகள் அடங்கிய பொதிகளை இன்று வியாழக்கிழமை(14) காலை அடம்பன் பொலிஸார் மீட்டுள்ளனர்.

அடம்பன் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து விரைந்து சென்ற பொலிஸார் அடம்பன் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கீலிக்கரையான் கடற்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 13 பொதிகளைக்கொண்ட 820 கிலோ கிராம் எடை கொண்ட குறித்த பீடி சுற்றும் இலைகளை மீட்டுள்ளனர்.

எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

மேலதிக விசாரனைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







அடம்பன் கீலிக்கரையான் கடற்பகுதியில் 820 KG பீடி சுற்றும் இலைகளைக் கொண்ட பொதிகள் மீட்பு-படங்கள் Reviewed by Author on February 14, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.