அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏழு இந்திய மீனவர்கள் விடுதலை!
திருகோணமலை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏழு இந்திய மீனவர்களை இன்று விடுதலை செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவின் தமிழ்நாடு நாகப்பட்டினம், வேளாங்கன்னி பகுதியைச் சேர்ந்த ஏழு மீனவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் பதினைந்து வயதுடைய சிறுவன் ஒருவரும் உள்ளடங்குவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த இந்திய மீனவர்கள் சட்டவிரோதமான முறையில் இலங்கையின் திருகோணமலை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட வேளை கடற்படையினரால் கடந்த 9ஆம் திகதி கைது செய்து திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு பொலிஸாரினால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே மீரிகான தடுப்பு முகாமில் ஒப்படைத்து அங்கிருந்து ஏழு மீனவர்களையும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏழு இந்திய மீனவர்கள் விடுதலை!
Reviewed by Author
on
February 22, 2019
Rating:
No comments:
Post a Comment