அண்மைய செய்திகள்

recent
-

பாதிக்கப்பட்ட உட்பட்ட ஊடகவியலாளர்களின் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது!


2005ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பல்வேறு துன்புறுத்தல்கள் மற்றும் இன்னல்களுக்கு உட்பட்ட ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைவாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் இவ்வாறு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
குறித்த விண்ணப்ப படிவங்களை அந்தந்த மாவட்டச் செயலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

உரியவாறு நிரப்பிய விண்ணப்ப படிவங்களை பதிவுத்தபாலில் மேலதிக செயலாளர்(அபிவிருத்தி மற்றும் திட்டமிடல்)இலக்கம் 163 அசிதிசி மெந்துர பொல்வேறன்கொட கிருளப்பனை வீதி கொழும்பு 05 என்ற முகவரிக்கு மார்ச் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் துன்புறுத்தல்களுக்கு உடபடுத்தப்பட்ட ஊடகவியலாளர் இல்லாவிடின் இரத்த உறவினர் ஒருவரினால் விண்ணப்பிக்கமுடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட உட்பட்ட ஊடகவியலாளர்களின் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது! Reviewed by Author on February 24, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.