அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற நடுகல்” நாவல் அறிமுக நிகழ்வு!


எழுத்தாளர் தீபச்செல்வனின் நடுகல் நாவல் இன்று 23ம் திகதி மாலை மூன்று முப்பது மணியளவில் கல்வி கலாசார மையத்தின் ஒழுங்கு படுத்தலில் கரைச்சி பிரதேச சபை கேட்போர் கூட மண்டபத்தில் வடமாகாண முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராசா தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் சிறப்பு வருகையாளராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டார். நடுகல் நாவலுக்கான விமர்சன உரையை யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் எழுத்தாளர் செல்வமனோகரன், எழுத்தாளர் வெற்றிச்செல்வியும் வழங்கிவைத்தனர்.

சிறப்புப் பிரதிகளை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வடமாகாண முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராசாவும் வழங்கி வைத்தனர்.
குறித்த நிகழ்வில் எழுத்தாளர்கள், பிரதேச சபை தவிசாளர்கள் ,பிரதேச சபை உறுப்பினர்கள் மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற நடுகல்” நாவல் அறிமுக நிகழ்வு! Reviewed by Author on February 24, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.