அண்மைய செய்திகள்

recent
-

ஊடகவியலாலர் P.மாணிக்கவாசகம் அவர்களின் "கால அதிர்வுகள்" நூல் அறிமுக விழா-படங்கள்


மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற ஊடகவியலாளர் திரு.P.மாணிக்கவாசகம் அவர்களின் " கால அதிர்வுகள்" நூல் அறிமுக விழா  மன்னார் நகர மண்டபத்தில் சனிக்கிழமை காலை 9.30  இன்று 09.02.2019 திகதி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

வரவேற்புரையினை  அருட்பணி  தமிழ் நேசன் அடிகளாரும்
வரவேற்பு நடனத்தினை பரதக்கலாலய நாட்டியப்பள்ளி மாணவிகளும்
ஆசியுரையினை மும்மதத் தலைவர்களும்  வழங்க
தலைமையுரையினை திரு நிக்சன் குரூஸ் அவர்களும்
நூல் அறிமுகவுரையினை எழுத்தாளர் வெற்றிச்செல்வி சந்திரகலா அவர்களும்

அருட்பணி  தமிழ் நேசன் அடிகளார் ஊடகவியலாளர் திரு.பி.மாணிக்கவாசகம் அவர்களின் " கால அதிர்வுகள்" வெளியிட  அவர்களிடம் இருந்து முதல் பிரதியினை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் பெற்றுக்கொண்டார் அதனைத்தொடர்ந்து அரச அதிகாரிகள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் எல்லோரும் பெற்றுக்கொண்டனர்.
நூல்மதிப்பீட்டுரையினை எழுத்தாளர் துறையூரான் சிவானந்தன் அவர்களும் சிறப்பாக வழங்கினர்.
40 ஆண்கள் கடந்தும் ஊடகத்துறையில் நிலைத்து நின்று மக்களின் பிரச்சினைகளை நடுநிலையமாக வழங்கி வரும் ஊடகவியலாளர் திரு.பி.மாணிக்கவாசகம் அவர்களின் " கால அதிர்வுகள்" நூல்
  போர்கால வரலாற்றினையும் தமிழர்களின் வாழ்வியலையும் மையமாக கொண்டு தனது  கட்டுரையாக்கத்தினை வெளியிட்டு இருப்பது கடந்து வந்த மறக்கமுடியாத  தமிழர்களின் வாழ்வின் சம்பவங்களின் ஒரு ஆவணத்தொகுப்பாகும்.

 நன்றியுரையினை மாக்ஸ் மில்லன் குரூஸ் வழங்க
நிகழ்ச்சி தொகுப்பினை கவிஞர் மயூரன் வழங்கினார் ஊடகவியலாளர் திரு.பி.மாணிக்கவாசகம் அவர்களின் " கால அதிர்வுகள்" நூல் அறிமுக விழா இனிதே நிறைவுபெற்றது.
-வை.கஜேந்திரன்-


































































ஊடகவியலாலர் P.மாணிக்கவாசகம் அவர்களின் "கால அதிர்வுகள்" நூல் அறிமுக விழா-படங்கள் Reviewed by Author on February 09, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.