சுயரூபத்தை காட்டத் தொடங்கிய மைத்திரி! செல்வம் எம்.பி எச்சரிக்கை -
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சுயரூபத்தை காட்ட தொடங்கிவிட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல் காலம் நெருங்கி வருகின்றமையினால் ஜனாதிபதி தனது சுயரூபத்தை வெளிக்காட்ட தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவின் உதவியுடன் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியிருந்தது.
எனினும், தற்போது அதனை மீளப்பெற்றுக்கொள்வது குறித்து ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“கடந்த தேர்தலின் போதும் அதற்கு பின்னரும் குழந்தை போல செயற்பட்ட அவர் தற்போது ஐக்கிய நாடுகள் பேரவையில் வழங்கிய இணை அனுசரணையிலிருந்து வாபஸ் பெறுவது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளமை ஏற்றுக் கொள்ளத்தக்க விடயமல்ல.
ஆகவே ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கின்ற ஏனைய சர்வதேச நாடுகளுடன் சந்திப்பினை மேற்கொள்வதற்கு அனுமதி கோரியுள்ளோம். அவ்வாறு சந்திப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கப் பெற்றால் இது குறித்து வலியுறுத்துவோம்” என கூறியுள்ளார்.
சுயரூபத்தை காட்டத் தொடங்கிய மைத்திரி! செல்வம் எம்.பி எச்சரிக்கை -
Reviewed by Author
on
February 26, 2019
Rating:
No comments:
Post a Comment