சித்திரவதைக்கு எதிராக ஐ.நா அறிக்கையில் இலங்கையர்களின் பெயர்!
சித்திரவதைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் சிலரது பெயர்கள் உள்ளடங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சித்திரவதைக்கு எதிரான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது இலங்கை அரசாங்கம் தகுந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாவிடின் அது இலங்கையின் அரசியல் கொள்கைகளில் அர்த்தமற்றதாகி விடும் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் சித்திரவதைகளுக்கு எதிராக அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சித்திரவதைக்கு எதிராக ஐ.நா அறிக்கையில் இலங்கையர்களின் பெயர்!
Reviewed by Author
on
February 26, 2019
Rating:
No comments:
Post a Comment