அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை விவகாரம்! அமெரிக்க தூதுவருடன் ஐநா அதிகாரிகள் ஆலோசனை -


ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் உயர்மட்டக் குழுவினருக்கும், அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட் ஆகியோருக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, இலங்கையில் நல்லிணக்கம், மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பில் அமெரிக்க தூதுவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில்,


“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் பணியத்தின் அதிகாரிகள் ஜோர்ஜெட் கக்னொன், ஜூவான் பெர்னான்டஸ் உள்ளிட்டவர்களை தற்போது சந்தித்துள்ளேன்.
இலங்கையில், மேலும் நல்லிணக்கம், மனித உரிமைகள் பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்காக அரசாங்கத்துடனும், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுடனும், இணைந்து பணியாற்றும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவை நாங்கள் மதிக்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரம்! அமெரிக்க தூதுவருடன் ஐநா அதிகாரிகள் ஆலோசனை - Reviewed by Author on February 14, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.