சிலாபத்துறையில் கடற்படை முகாமுக்கு முன் 22 ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கின்றது.-(படம்)
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி தமது காணிகளை வழங்கக் கோரி பாதீக்கப்பட்ட மக்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் 22 ஆவது நாளாக இன்று 13-03-2019 புதன் கிழமை தொடர் போராட்டம் இடம் பெற்று வருகின்றது.
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி தமது காணிகளை வழங்கக் கோரி பாதீக்கப்பட்ட மக்கள் கடந்த மாதம் 20 ஆம் திகதி மாலை முதல் தொடர் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
யுத்ததின் போது முசலி பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தாங்கள் மீண்டும் முசலி பகுதிக்கு மீள் குடியேற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் வந்தும் கடற்படையினர் எமது காணிகளை ஆக்கிரமித்திருப்பதால் தாங்களும் எங்களுடன் சேர்ந்த 218 மேற்பட்ட குடும்பங்களும் மீள் குடியேற்றப்பட முடியாத நிலையில் உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் குறித்த முசலி பகுதியில் அதிகலவான அரச காணிகள் இருக்கும் போது தங்களுக்கு சொந்தமான காணி உறுதியுடைய காணிகளை கடற்படை ஆக்கிரமித்து இருப்பது தொடர்பில் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அதே நேரத்தில் தங்கள் போராட்டம் தொடங்கி ஒரு மாதம் கடக்க போகின்ற நிலையில் பிரதேச செயலாளர் அல்லது மாவட்ட அரசங்க அதிபரோ எங்களுடைய பிரச்சினை தொடர்பாக எங்களை சந்திக்கவோ கேட்டறியவோ இல்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
போராட்டம் தொடங்கிய அன்றே தாங்கள் முசலி பிரதேச செயலாளருக்கு மகஜர் கையளித்துள்ள போதும் இது வரைபிரதேச செயலாளர் எங்களை சந்திக்காதது எங்களுக்கு மிகவும் வேதனை அழிக்கின்றது என அந்த மக்கள் தெரிவித்துளள்ளனர்.எந்த அதிகாரிகள் வாராது விட்டாலும் சரி எங்கள் காணிகளை மீட்கும் வரை எங்கள் போரட்டம் தொடரும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
218 குடும்பங்களுக்குச் சொந்தமான 35 ஏக்கர் நிலப்பரப்பை கடற்படையினர் சுவீகரித்துள்ளதோடு,கடற்படை முகாமும் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த காணியை விடுவித்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்த போதும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் பாதீக்கப்பட்ட மக்கள் கடந்த மாதம் 20 ஆம் திகதி சிலாவத்துறை கடற்படை முகாமுக்கு முன்னர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் குறித்த போராட்டம் தொடர்ந்தும் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி தமது காணிகளை வழங்கக் கோரி பாதீக்கப்பட்ட மக்கள் கடந்த மாதம் 20 ஆம் திகதி மாலை முதல் தொடர் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
யுத்ததின் போது முசலி பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தாங்கள் மீண்டும் முசலி பகுதிக்கு மீள் குடியேற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் வந்தும் கடற்படையினர் எமது காணிகளை ஆக்கிரமித்திருப்பதால் தாங்களும் எங்களுடன் சேர்ந்த 218 மேற்பட்ட குடும்பங்களும் மீள் குடியேற்றப்பட முடியாத நிலையில் உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் குறித்த முசலி பகுதியில் அதிகலவான அரச காணிகள் இருக்கும் போது தங்களுக்கு சொந்தமான காணி உறுதியுடைய காணிகளை கடற்படை ஆக்கிரமித்து இருப்பது தொடர்பில் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அதே நேரத்தில் தங்கள் போராட்டம் தொடங்கி ஒரு மாதம் கடக்க போகின்ற நிலையில் பிரதேச செயலாளர் அல்லது மாவட்ட அரசங்க அதிபரோ எங்களுடைய பிரச்சினை தொடர்பாக எங்களை சந்திக்கவோ கேட்டறியவோ இல்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
போராட்டம் தொடங்கிய அன்றே தாங்கள் முசலி பிரதேச செயலாளருக்கு மகஜர் கையளித்துள்ள போதும் இது வரைபிரதேச செயலாளர் எங்களை சந்திக்காதது எங்களுக்கு மிகவும் வேதனை அழிக்கின்றது என அந்த மக்கள் தெரிவித்துளள்ளனர்.எந்த அதிகாரிகள் வாராது விட்டாலும் சரி எங்கள் காணிகளை மீட்கும் வரை எங்கள் போரட்டம் தொடரும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
218 குடும்பங்களுக்குச் சொந்தமான 35 ஏக்கர் நிலப்பரப்பை கடற்படையினர் சுவீகரித்துள்ளதோடு,கடற்படை முகாமும் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த காணியை விடுவித்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்த போதும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் பாதீக்கப்பட்ட மக்கள் கடந்த மாதம் 20 ஆம் திகதி சிலாவத்துறை கடற்படை முகாமுக்கு முன்னர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் குறித்த போராட்டம் தொடர்ந்தும் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிலாபத்துறையில் கடற்படை முகாமுக்கு முன் 22 ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கின்றது.-(படம்)
Reviewed by Author
on
March 13, 2019
Rating:
No comments:
Post a Comment