மன்னார் பேசாலையில் பொப்புலர் மிஷன் தியானம்
இந்தியாவிலிருந்து மன்னார் மறைமாவட்டத்துக்கு வருகை தந்திருக்கும்
வின்சென்ஷயன் அருட்தந்தையர்கள் முன்னின்று நடாத்தும் பொப்புலர் மிஷன் தியானமானது முதலில் வங்காலை புனித ஆனாள் பங்கில் ஆரம்பமாகி பின் பள்ளிமுனை புனித லூசியா ஆலய பங்கில் நிறைவேற்றப்பட்டத்தைத் தொடர்ந்து இரு வாரங்களுக்கு பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (17.03.2019) தொடக்கம் 22.03.2019 வெள்ளிக் கிழமை வரை இவ் தியானம்
நடைபெறுகின்றது.
இவ் தியானத்தை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக் கிழமை (10.03.2019) புனித
வெற்றி அன்னை ஆலய முன்றலில் கொடியேற்றப்பட்டு அன்றுமுதல் இவ்
அருட்தந்தையர்கள் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய பங்கு மக்களின் 1400வீடுகளை தரிசித்து அவர்களுக்காக வீடுகளில் செபித்து வருகின்றனர்.
இவ் தியானத்தை முன்னிட்டு ஆலய முன்றலில் பாப்பரசரின் கொடியேற்றப்பட்டு செபிப்பதையும் காணலாம்.
மன்னார் பேசாலையில் பொப்புலர் மிஷன் தியானம்
Reviewed by Author
on
March 14, 2019
Rating:
No comments:
Post a Comment