அண்மைய செய்திகள்

recent
-

நானாட்டான் பிரதேசத்தில் 51வீடுகளைக் கொண்ட 03மாதிரிகிராமங்களுக்கு அடிக்கல் நடப்பட்டது


நானாட்டான் பிரதேசத்தில் ஐம்பத்தியொரு வீடுகளைக் கொண்ட மூன்று மாதிரிகிராமங்களுக்கு  அடிக்கல் நடப்பட்டது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நானாட்டான் பிரதேசத்தில்  ஏழரை லட்சம் பெருமதியில் ஐம்பத்தியொரு  வீடுகளைக் கொண்ட மூன்று மாதிரிகிராமங்களுக்கு அடிக்கல் 02-03-2019 நறுவிலிக்குளம் கிராமத்தில் நடப்பட்டது
இந்நிகழ்வில் நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் தி.பரஞ்சோதி  உபதவிசாளர்  மற்றும் உறுப்பினர்கள் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மன்னார் மாவட்ட முகாமையாளர் கிராமசேவையாளர்  தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர் சந்தான் போன்றோர் கலந்து கொண்டனர் மக்களின் பங்களிப்புடன் கட்டப்படும் இந்த  வீட்டுத்திட்டங்கள் நறுவிலிக்குளம் கிராமத்தில் பதினெட்டு வீடுகளும்
மடுக்கரையில் பதினாறு வீடுகளும்
செம்மண்தீவில்  பதினேழு வீடுகளும் அமைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







நானாட்டான் பிரதேசத்தில் 51வீடுகளைக் கொண்ட 03மாதிரிகிராமங்களுக்கு அடிக்கல் நடப்பட்டது Reviewed by Author on March 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.