அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் வரட்சியால் பாதீக்கப்படும் பிரதேசங்களுக்கு குடி நீர் பௌசர் வழங்கி வைப்பு-படம்

சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ஒரு தொகுதி குடி நீர் பௌசர் வாகனங்களில் மன்னார் மாவட்டத்திற்கு என மூன்று பௌசர் வாகனங்கள் அனார்த்த முகாமைத்துவ அமைச்சின் அனார்த்த நிவாரண சேவைகள் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.

குறிப்பாக இலங்கையில் வரட்சியினால் பாதீக்கப்பட்ட மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டு வழங்கப்பட்ட நிலையில் மன்னார் மாவட்டத்திற்கும் வழங்கி வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் கையளிக்கப்பட்ட குறித்த பௌசர் வாகனங்கள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இன்று (28) வியாழக்கிழமை மாலை தெரிவு செய்யப்பட்ட பிரதேசச் செயலகங்களுக்கு கையளிக்கப்பட்டது.

மாந்தை மேற்கு,மடு மற்றும் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுகளின் பயண்படுத்துவதற்காக குறித்த பௌசர் வாகனங்கள் பிரதேசச் செயலாளர்களிடம் மாவட்ட அரசாங்க அதிபர் உத்தியோக பூர்வமாக கையளித்தார்.

குறித்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், அனார்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் கே.திலீபன் உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.





மன்னார் மாவட்டத்தில் வரட்சியால் பாதீக்கப்படும் பிரதேசங்களுக்கு குடி நீர் பௌசர் வழங்கி வைப்பு-படம் Reviewed by Author on March 01, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.