அண்மைய செய்திகள்

recent
-

தேசிய பெண்கள் தினத்தை ஒட்டி அம்பாறையில் நிகழ்வு-படங்கள்

2019 ஆண்டுக்கான மகளீர்தினமானது நாடு பூரகவும் விளிப்புணர்வுடன் கூடிய விதத்தில் இடம் பெற்று வருகின்றது அந்த வகையில் மாற்றத்தின் முகவரி பெண்கள் எனும் தொணிப்பொருளில் நேற்று மாலை 2.30 மணியளவில் அம்பாறை கடற்கறை பூங்கா அருகில் அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் அதன் ஓருங்கினைப்பாளர் கலைவாணி தயாபரன் தலைமையில் மகளீர் தினமானது இடம் பெற்றது

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக தென்கிழக்கு பல்கழைகலக சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி அனுசியா சேனாதிராஜா அவர்களும் விசேட விருந்தினர்களாக கல்முனை தமிழ் பிரிவின் பிரதேச செயளாலர்  திரு அதிசயராஜா அவர்களும் அம்பாறை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைபாளர் திரு.இசைடீன் அவர்களும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் இணைப்பாளர் திரு.யாட்சன் அவர்களும் கலந்து கொண்டனர்

குறித்த நிகழ்வில் மன்னார் கிளிநொச்சி முல்லைத்தீவு அம்பாறை கல்முனை போன்ற பகுதிகளை சேர்ந்த பெண்கள் அமைப்புக்கள் பலவும் கலந்து கொண்டதுடன் விழிப்புணர்வு நாடகங்கள் பேச்சுகள் இடம் பெற்றதுடன் சிறப்பாக அரங்கேற்ற பட்ட மன்னார் தேவன் பிட்டி பகுதியை சேர்ந்த நாடக குழுவினருக்கு வெற்றிகிண்ணம் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிட தக்கது.






தேசிய பெண்கள் தினத்தை ஒட்டி அம்பாறையில் நிகழ்வு-படங்கள் Reviewed by Author on March 15, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.