சிலாவத்துறை,முள்ளிக்குளத்தில் மக்களின் காணிகளில் உள்ள கடற்படையினரை வெளியேற்றக்கோரி மன்னார் நகர சபை அமர்வில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்-(படம்)
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறை மற்றும் முள்ளிக்குளம் கிராமங்களில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினர் முழுமையாக வெளியேற்றப்பட்டு குறித்த காணிகள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என மன்னார் நகர சபையின் அமர்வின் போது 21-03-2019 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-மன்னார் நகர சபையின் 13 ஆவது அமர்வு இன்று (21) மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமயில் மன்னார் நகர சபையின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன் போதே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபையின் உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் குறித்த பிரேரனையை சபையில் கொண்டு வந்தார்.குறிப்பாக சுமார் ஒரு மாதங்களாக சிலாவத்துறை மக்கள் சிலாவத்துறை கடற்படை முகாமுக்கு முன்பாக தமது காணிகளை மீட்கும் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர்.
மக்களின் காணி பிரச்சினை தொடர்பாக மன்னார் நகர சபையும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும்,கடற்படையினரை குறித்த மக்களின் காணிகளில் இரந்து வெளியேற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்தார்.
இதன் போது மன்னார் நகர சபையின் உப தலைவர் எஸ்.ஜான்சன் குறித்த பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்ததோடு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) மன்னார் நகர சபை தலைவர் மற்றும் சக உறுப்பினர்களிடம் எழுத்து மூலம் பிரேரணையை நிறைவேற்ற கோரிக்கை விடுத்தமையினை சபைக்கு தெரிவித்ததோடு,மக்களின் காணிகயில் உள்ள படையினர் வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்தார்.
இதன் போது பதில் வழங்கிய நகர சபையின் தலைவர் மக்களின் காணிகளில் உள்ள படையினர் அகற்றப்பட்டு மக்களிடம் வழங்கப்பட வேண்டும்.
சிலாவத்துறை கடற்படை முகாமில் உள்ள கடற்படையினர் வெளியேற்றப்பட்டு காணி மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
அதே போன்று முள்ளிக்குளத்தில் மக்களின் காணிகளில் உள்ள கடற்படையினரும் வெளியேற்றப்பட்டு குறித்த காணியும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்ததோடு,தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
குறித்த தீர்மானத்திற்கு சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நகர சபையின் 13 ஆவது அமர்வு இன்று (21) மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமயில் மன்னார் நகர சபையின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன் போதே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபையின் உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் குறித்த பிரேரனையை சபையில் கொண்டு வந்தார்.குறிப்பாக சுமார் ஒரு மாதங்களாக சிலாவத்துறை மக்கள் சிலாவத்துறை கடற்படை முகாமுக்கு முன்பாக தமது காணிகளை மீட்கும் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர்.
மக்களின் காணி பிரச்சினை தொடர்பாக மன்னார் நகர சபையும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும்,கடற்படையினரை குறித்த மக்களின் காணிகளில் இரந்து வெளியேற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்தார்.
இதன் போது மன்னார் நகர சபையின் உப தலைவர் எஸ்.ஜான்சன் குறித்த பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்ததோடு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) மன்னார் நகர சபை தலைவர் மற்றும் சக உறுப்பினர்களிடம் எழுத்து மூலம் பிரேரணையை நிறைவேற்ற கோரிக்கை விடுத்தமையினை சபைக்கு தெரிவித்ததோடு,மக்களின் காணிகயில் உள்ள படையினர் வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்தார்.
இதன் போது பதில் வழங்கிய நகர சபையின் தலைவர் மக்களின் காணிகளில் உள்ள படையினர் அகற்றப்பட்டு மக்களிடம் வழங்கப்பட வேண்டும்.
சிலாவத்துறை கடற்படை முகாமில் உள்ள கடற்படையினர் வெளியேற்றப்பட்டு காணி மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
அதே போன்று முள்ளிக்குளத்தில் மக்களின் காணிகளில் உள்ள கடற்படையினரும் வெளியேற்றப்பட்டு குறித்த காணியும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்ததோடு,தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
குறித்த தீர்மானத்திற்கு சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிலாவத்துறை,முள்ளிக்குளத்தில் மக்களின் காணிகளில் உள்ள கடற்படையினரை வெளியேற்றக்கோரி மன்னார் நகர சபை அமர்வில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்-(படம்)
Reviewed by Author
on
March 22, 2019
Rating:
No comments:
Post a Comment