அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் இந்து குருமார்களின் விலகள் தொடர்பாக சர்வமத பேரவையிடம் அறிவிக்கப்படவில்லை- சர்வமத பேரைவையின் இணைத்தலைவர் மெளளவி அசீம்

அண்மையில் மாந்தை பகுதியில் இந்து மற்றும் கத்தோலிக்க மக்களிடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மன்னார் மாவட்ட இந்துகுருமார் சங்கங்களை பிரதிநிதித்துவபடுத்தும் இந்து குருமார்கள் சம்மேளனம் தாங்கள் மன்னார் மாவட்ட ரீதியில் இயங்கும் அனைத்து சர்வமத குழுக்களிலும் இருந்து வெளியேருவதாக தெரிவித்திருந்தனர்

அதே நேரத்தில் குறித்த விலகள் தொடர்பாக மன்னார் மாவட்ட சர்வமத பேரவைக்கு கடிதம்  இந்து குருமார் பேரவையினால் வழங்கப்பட்ட போதும் தங்கள் அவ் கடிதத்தினை என்னமும் சர்வமத பேரவையில் சமர்பிக்கவில்லை என தெரிவித்துள்ளார்

தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் மத சகவாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு எனும் தொணிப்பொருளில் இடம் பெற்று வரும் இரண்டு நாள் பரஸ்பர பரிமாற்று விஜய நிகழ்வில் கலந்து கொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

மேலும் அவர் தெரிவிக்கையில்

மத ரீதியான பிரச்சினைகள் ஏற்படுவது வழமை தான் இருப்பினும் அதனை அனைத்து மத தலைவர்களும் இணைந்து தீர்த்து கொள்ள வேண்டும்
மாந்தை சந்தியில் இடம் பெற்ற முரண்பாடுகளின் போது சில காரணங்களால் எங்களால் உடனடியாக செயற்பட முடியாமல் போனாலும் அவ் பிரச்சினை தொடர்பாக இரு சமூகத்தையும் சுமூகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்

சில நேரங்களின் நிஜாயம் தொடர்பாக கலந்துரையாடும் போது ஒரு தரப்புக்கு சாதகமாகவும் இன்னோறு தரப்புக்கு பாதகாமவும் அமையலாம் ஆனாலும்
பிரச்சினைகளை சீர் செய்வதே சிறந்தது

இதுவரை சர்வமத பேரவை என்ற அடிபடையில் கத்தோலிக்க மக்களை சந்தித்து அவர்கள் தரப்பில் கருத்துக்களை பெற்று கொண்டுள்ளோம் அதே போன்று இந்து மக்கள் சார்பிலும் அவர்களுடமும் 20-03-2019  புதன் கிழமை  கலந்துரையாடளை மேற்கொண்டு நடைமுறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏற்பாடுகாள் மேற்கொண்டு இருக்கின்றோம்

கலந்துரையாடலின் பின்னர் இரு தரப்பினரையும் இணைத்து ஒரு கலந்த்துரையாடல் மேற்கொள்வோம் எத்தனை தடைகள் வந்தாலும் மத நல்லிணக்கத்தினத்திற்கு எதிரான எல்லா இடையூறுகளையும் தவிர்த்து மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவேம் என தெரிவித்தார் அதனால் தான் இன்னமும் விலகல் கடிதத்தை தாங்கள் சர்வமத பேரவையிடம் சமர்பிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.







மன்னார் இந்து குருமார்களின் விலகள் தொடர்பாக சர்வமத பேரவையிடம் அறிவிக்கப்படவில்லை- சர்வமத பேரைவையின் இணைத்தலைவர் மெளளவி அசீம் Reviewed by Author on March 20, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.