அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தந்தை செல்வநாயகத்தின் 121 ஆவது பிறந்த தினம் அனுஸ்ரிப்பு-படங்கள்

தந்தை செல்வநாயகத்தின் (தந்தை செல்வா) 121ஆவது பிறந்த தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (31) மன்னாரில் அனுஸ்ரிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில், மன்னார் நகர சபை உறுப்பினர் திருச் செல்வம் சந்திரன் தலைமையில் மன்னார் பஸார் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு முன் காலை 10.30 மணியளவில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
-இதன் போது தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அனுவிக்கப்பட்டது.

தமிழ் சேதசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகர சபையின் தலைவர் ஞா.அன்ரனி டேவிட்சன், நானாட்டான் பிரதேச தலையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி,மன்னார் நகர சபையின் உப தலைவர் எஸ்.எஸ்.ஜாட்சன்,வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அனுவித்தனர்.

அதனைத் தொடர்ந்து இனிப்பு வழங்கி தந்தை செல்வநாயகத்தின் (தந்தை செல்வா) 121 ஆவது பிறந்த தினம் அனுஸ்ரிக்கப்பட்டது.
இதன் போது பொது மக்கள்,சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







மன்னாரில் தந்தை செல்வநாயகத்தின் 121 ஆவது பிறந்த தினம் அனுஸ்ரிப்பு-படங்கள் Reviewed by Author on April 01, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.