இரண்டே நாளில் குதிகால் வீக்கத்தை போக்கணுமா?
அளவுக்கதிக உடல்பருமனும் குதிகால்களில் அழுத்தம் சேர்த்து வலிக்குக் காரணமாகும்.
மேலும் தட்டைப்பாதம், வளைந்த பாதம் மற்றும் அசாதாரணமான நடை கொண்டவர்களுக்கு குதிகால் வலி வரலாம்.
இதில் இருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அற்புத பானத்தை குடித்தாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.
தேவையானவை
- முழு நெல்லிக்காய் - 10
- வெற்றிலை - 20
- கொத்தமல்லி இலை
- கறிவேப்பிலை - தலா ஒரு கைப்பிடி
- காய்ந்த மிளகாய் - 4
- பூண்டு - 6 பல்
- வால் மிளகு
- சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
- நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
- உப்பு - தேவைக்கு.
செய்முறை
நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.வெறும் சட்டியில் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, பொடியாக அரிந்த பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றைப் போட்டு இளவறுப்பாக வறுக்கவும்.
பின்னர், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்துவைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும். அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு நீர் சேர்த்துக் கொதிக்கவைக்கவும்.
அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம் வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.
இந்த பானத்தை குடிப்பதனால் குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்கும்.
மேலும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதய நோயாளிகளுக்கும் ஏற்ற உணவு. எலும்புப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
இரண்டே நாளில் குதிகால் வீக்கத்தை போக்கணுமா?
Reviewed by Author
on
April 07, 2019
Rating:
No comments:
Post a Comment