கைது செய்யப்பட்ட 500 போராளிகளுக்கும், 27 குழந்தைகளுக்கும் நடந்தது என்ன? நீடிக்கும் மர்மம் -
அரசாங்கத்தின் கொடூரத்தன்மையின் முக்கிய விடயமாக கைது செய்யப்பட்ட ஐந்நூறு போராளிகளுக்கும் 27 குழந்தைகளின் நிலை என்ன? அவர்களுக்கு என்ன நடந்தது என அரசு கூறமறுப்பது ஏன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வியுள்ளார்.
இன்று முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இருந்து வட்டுவாகல் கடற்படை முகாம்வரை பேரணியாக சென்றடைந்தது.
இப் பேரணியில் கலந்து கொண்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,
இராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட 500 மேற்பட்ட போராளிகள் மற்றும் 27குழந்தைகளுக்கு என்ன நடந்தது?
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கடந்த பத்து வருட காலமாக தங்கள் உறவுகளை தேடிக்கொண்டு பல போரட்டங்களை நடாத்திக்கொண்டு இருக்கின்றார்கள். இதற்கு ஐநா மனித உரிமைபேரவையும் அரசாங்கமும் பதில் சொல்லவேண்டும். உயிருடன் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்கள் தற்போது உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்ற பதிலை முன்னாள் ஆட்சியாளர்களும் சரி இந்நாள் ஆட்சியாளர்களும் சரி உரிய பதிலை வழங்கவில்லை.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் நீர்த்துப்போக செய்வதற்கு அரசாங்கம், ஐநா மட்டுமல்லாது தமிழ் மக்களின் வாக்குகளை பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய காரணகர்த்தாக்களாகவுள்ளனர்.
இதேவேளை, ஜெனிவா மனித உரிமை பேரவையில் மூன்றுதடவை காலநீடிப்பை பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்கத்தின் நான்கு வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரிக்கவும் ஐம்பத்து இரண்டு நாள் அரசியல் குழப்பத்திற்கு ஆதரவு வழங்கி அரசாங்கத்திற்கு முண்டுகொடுத்துக்கொண்டு இருக்கின்றனர். இவர்கள் அரசாங்கத்திற்கு நிபந்தனை அற்ற ஆதரவு வழங்கி இவர்களது போராட்டத்தை நீர்த்துபோகச்செய்துள்ளனர்.
அரசாங்கத்தின் கொடூரத்தன்மையின் முக்கிய விடயமாக போராளிகளோடு கைதுசெய்யப்பட்ட 27 குழந்தைகளின் நிலை என்ன? அவர்களுக்கு என்ன நடந்தது என அரசு கூறமறுப்பது ஏன் என்றார்.
கைது செய்யப்பட்ட 500 போராளிகளுக்கும், 27 குழந்தைகளுக்கும் நடந்தது என்ன? நீடிக்கும் மர்மம் -
Reviewed by Author
on
April 08, 2019
Rating:
No comments:
Post a Comment