மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம் பெற்ற குண்டு தாக்குதலின் தொடர்புடையவரின் தலை மீட்பு-(படம்)
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம் பெற்ற குண்டு தாக்குதலின் தொடர்புடையவர் என்பவரின் தலை மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) காலை இடம் பெற்ற வெடிப்புச்சம்பவத்தின் போது 28 பேர் உயிரிழந்துள்ளதோடு 50 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் மட்டக்களப்பு ஓட்டமாவடியைச் சேர்ந்த உமர் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட நபர் ஒருவரே குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இந்த நிலையில் தாக்குதலை மேற்கொண்ட குறித்த நபரது தலையினை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த தாக்குதல் தற்கொலை தாக்குதல் என தெரிய வருகின்றது
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம் பெற்ற குண்டு தாக்குதலின் தொடர்புடையவரின் தலை மீட்பு-(படம்)
Reviewed by Admin
on
April 21, 2019
Rating:
No comments:
Post a Comment