திருக்கேதீச்சரம் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் கடந்தகாலங்களில்-திருக்கேதீச்சர திருப்பணிச்சபை செயலாளர் S.S.இராமகிருஷ்ணன்
திருக்கேதீச்சரம் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் கடந்தகாலங்களில் திருக்கேதீச்சர நிர்வாகத்தினரும் மன்னார் கத்தோலிக்கத் திருச்சபையினரும் நீதிமன்றங்களின் மூலம் செய்துகொண்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதே சிறந்தது
திருக்கேதீச்சர திருப்பணிச்சபை செயலாளர் எஸ்.எஸ்.இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
07-04-2019 திருக்கேதீஸ்வரம் ஒன்று கூடல் மண்டபத்தில் காலை 10-00 மணியளவில் திருக்கேதீச்சரம் பிரச்சனை தொடர்பாகவும் காணிப்பிணக்குகள் தொடர்பாகவும் கடந்தகாலங்களில் திருக்கேதீச்சர நிர்வாகத்தினர் நீதிமன்றத்தினூடாக செய்து கொண்ட ஒப்பந்தங்களின் படி நீதிமன்றங்கள் திருக்கேதீச்சர நிர்வாகத்தினருக்கு வழங்கியிருந்த ஒப்பந்த ஆவனக் கடிதங்களை சைவ மக்களுக்கு வாசித்தும் காட்டப்பட்டு இவை தொடர்பான நீண்ட விளக்கம் அளிக்கப்பட்டது
அத்துடன் எதிர்காலத்தில் இந்து சமயத்தினரின் பாதுகாப்பு ஒற்றுமை போன்றவை பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இது சம்பந்தமாக ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த செயலாளர் இரமகிருஷ்ணன் அவர்கள் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் உண்மையை பேச வேண்டும் திருக்கேதீச்சரம் வளைவு உடைப்பு பிரச்சனையால் எமக்கும் கத்தோலிக்க மக்களுக்குமான உறவில் எந்த பாதிப்பும் இல்லை சமாதானம் நல்லினக்கத்திற்கும் நாங்கள் எப்பொழுதும் தயாராகவே இருக்கின்றோம் உடைக்கப்பட்ட வளைவை அவ்விடத்தில் நடுவதற்கு அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும் அத்துடன் கடந்த காலங்களில் திருக்கேதீச்சரம் காணிப்பிணக்குகள் மாந்தை சந்தியில் லூர்து மாதா ஆலயம் அமைவிடம் தொடர்பாக நீதி மன்றத்தின் மூலம் இரு தரப்பினரும் செய்து கையெழுத்திட்டுக் கொண்ட ஒப்பந்தங்களை மதித்து அந்த ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்திற்கு இந்த பிரச்சனைகள் நீண்டு செல்வதை தவிர்த்துக்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் திருக்கேதீச்சர திருப்பணிச்சபை செயலாளர் S.S.இராமகிருஷ்ணன் மன்னார் மாவட்ட இந்து ஒன்றியங்களின் தலைவர் வைத்தியர் கதிர்காமநாதன் மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவை தலைவர் சிவ ஸ்ரீ தர்மகுமார குருக்கள் திருக்கேதீச்சரத்தின் பிரதம குரு கருணானந்த குருக்கள் பொறியியலாளர் காந்தன் மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களில் பிரதிநிதிகள் மாந்தை மேற்கு இந்து சமய பேரவை உறுப்பினர்கள் மற்றும் சிவத்தொண்டர்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.
திருக்கேதீச்சரம் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் கடந்தகாலங்களில்-திருக்கேதீச்சர திருப்பணிச்சபை செயலாளர் S.S.இராமகிருஷ்ணன்
Reviewed by Author
on
April 08, 2019
Rating:
No comments:
Post a Comment