அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட நைஜிரியா பிரஜைகள் தொடர்ந்து விளக்கமறியலில்--

குடிவரவு குடியகள்வு சட்டத்துக்கு மாறாக தலைமன்னார் கடல் மார்க்கமாக
இந்தியாவுக்கு தப்பியோட முனைந்ததாக  நான்கு நைஜிரியா நாட்டைச்
சேர்ந்தவர்களும் இவர்களுடன் இரு இலங்கை பிரஜைகளும் சம்பந்தமான வழக்கில் இவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் ரி.சரவணராஜா கட்டளை பிறப்பித்துள்ளார்.

நான்கு நைஐPரியா நாட்டைச் சேர்ந்தவர்களையும் மன்னார் உதயபுரம்
கிராமத்தைச் சேர்ந்தவர்களையும் கடந்த 31.03.2019 அன்று தலைமன்னார்
கடற்படையினர் தலைமன்னார் கடற்பரப்புக்குள் ஒரு படகுடன்  கைது செய்து
தலைமன்னார் பொலிசில் ஒப்படைத்திருந்தனர்.

இவ் ஆறு சந்தேக நபர்களையும்; தலைமன்னார் பொலிசார் கடந்த செவ்வாய் கிழமை 02.04.2019 மன்னார் நீதிமன்றில் மன்னார் நீதிபதி ரி.சரவணராஐh
முன்னிலையில் ஆஐர்படுத்தியிருந்தபொழுது இவர்கள் விளக்கமறியல்
வைக்கப்பட்டனர்.

இவ் வழக்கு மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக் கிழமை (05.04.2019) விசாரனைக்கு எடுக்கப்பட்டபோது இவர்கள் குடிவரவு குடியகள்வு சட்டத்துக்கு மாறாக தலைமன்னார் கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு தப்பியோட முனைந்ததாக தலைமன்னார் பொலிசாரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இவ் வழக்கின்போது இந்த ஆறு சந்தேக நபர்கள் சார்பாக மன்னார் சிரேஷ;ட
சட்டத்தரனிகள் பா.டெனிஸ்வரன், ரி.வினோதன் மற்றும் செல்வராஜா டினேஷன் ஆஐராகியிருந்தனர்.

சட்டத்தரனிகள் இவ் வழக்கில் தங்கள் வாதங்களை முன்வைக்கையில்

இவர்கள் ஏற்கனவே இலங்கைக்கு உல்லாச பயணிகளாக வந்தவர்கள். இவர்கள் தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடைப்பட்டுள்ள இராமர் அணை என அழைக்கப்படும் மண் திட்டியை பார்ப்பதற்காகவே ஒரு படகில் சென்றனர்.

இவர்கள் அங்கு சென்று திரும்புவதில் காலம் தாழ்த்தப்பட்டதால் இரவாகி
விட்டது. இவர்களுடைய கடவுச் சீட்டானது இவர்களுக்கு எதிரான ஒரு வழக்கில் கொழும்பில் இருக்கின்றது.

இவர்களுடைய கடவுச் சீட்டுக்கள் கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும்
நிலையில் இவர்கள் இவற்றை விட்டுச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இங்கு நிற்கும் காலங்களில் இவ் உல்லாசப்பயணிகள் இலங்கையில் இடங்களை பார்வையிட்டு செல்வதில் ஆர்வம் காட்டியமையின் ஒரு அங்கமாகவே தலைமன்னாரிலுள்ள இவ் மண் திட்டியை பார்வையிடும் சம்பவத்திலே இவ் நிகழ்வு இடம்பெற்றுள்ளது என தங்கள் வாதங்களை முன் வைத்தனர்
இதைத் தொடர்ந்து இவ் வழக்கை எதிர்வரும் 16.04.2019 வரை ஒத்திவைத்த
நீதவான் இவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவு
பிறப்பித்தார்.

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட நைஜிரியா பிரஜைகள் தொடர்ந்து விளக்கமறியலில்-- Reviewed by Author on April 07, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.