இலங்கை குண்டு வெடிப்புக்கும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்துக்கும் தொடர்பில்லை: அந்த இயக்கத்தின் தலைவர் விளக்கம் -
இது தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் தலைவர் அளித்துள்ள பேட்டியில், இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும், தேசிய தவ்ஹித் ஜமாத்திற்கும் தொடர்பு இருப்பதாக ஒரு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
மேலும் அதில் தேசிய தவ்ஹித் ஜமாத்தின் பின்னணியில் இலங்கை தவ்ஹித் ஜமாத் மற்றும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தும் இருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த செய்தியை தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் வன்மையாக கண்டித்தது. பின்னர் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் பெயரை சேர்த்ததற்கு அந்த ஆங்கில நாளிதழ் மறுப்பு செய்தியும் வெளியிட்டது.
எந்த ஒரு இஸ்லாமியரும் வழிபாட்டு தலங்களிலும் அசம்பாவிதங்களையும் செய்ய மாட்டார்கள். இலங்கை குண்டு வெடிப்பில் எந்த அமைப்பினர் செய்திருந்தாலும் அவர்களை நாங்கள் கண்டிக்கிறோம் என கூறினார்.
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் மாநில பொது செயலாளர் முகமது பேசுகையில், இலங்கையில் நடந்த துயர சம்பவத்தில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தும் எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
இந்த குண்டு வெடிப்பில் இலங்கை தவ்ஹித் ஜமாத் பின்னணியில் இருப்பதாகவும், இதன் பின்னணியில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் இருப்பதாகவும் கூறியுள்ளார்கள்.
குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேசிய தவ்ஹித் ஜமாத் மீது சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் தேசிய தவ்ஹித் ஜமாத்திற்கும், இலங்கை தவ்ஹித் ஜமாத்திற்கும், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை.
தமிழ்நாட்டில் தீவிரவாதத்தை எதிர்க்கும் அமைப்பாகவும், மக்கள் நல சேவையில் ஈடுபடும் அமைப்பாக தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பு செயல்பட்டு வருகிறது.
எங்களுக்கும், இலங்கை தவ்ஹித் ஜமாத்திற்கும் கொள்கை ரீதியான தொடர்பு உள்ளது. ஆனால் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக கூறப்படும் தேசிய தவ்ஹித் ஜமாத்திற்கும், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்திற்கும், இலங்கை தவ்ஹித் ஜமாத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. தவ்ஹித் ஜமாத் என்ற பெயர் கொண்டிருப்பதால் தான் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
இலங்கை குண்டு வெடிப்புக்கும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்துக்கும் தொடர்பில்லை: அந்த இயக்கத்தின் தலைவர் விளக்கம் -
Reviewed by Author
on
April 24, 2019
Rating:
No comments:
Post a Comment