அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தாழ்வுபாடு மற்றும் கீரி -24 மேற்பட்ட தொலைபேசிகளுடன் ஒருவர் கைது-படங்கள்

மன்னார் பிரதேசசபைக்கு உட்பட்ட தாழ்வுபாடு மற்றும் கீரி பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு பரிசோதனை நடவடிக்கைகளின் போது 25 மேற்பட்ட கையடக்க தொலைபேசி வைத்திருந்த நபர் ஒருவர்  சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள கிராமப்பகுதிகளின் பாதுகாப்பு தொடர்பான இராணுவ நடவடிக்கையானது நேற்றைய தினம் தாழ்வுபாடு மற்றும் கீரி கிராமங்களில் இடம் பெற்றது.
குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது வீடுகள் மற்றும் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டது

தொடர்ச்சியான நடவடிக்கைகளின் போது 25 க்கு மேற்பட்ட கையடக்கதொலைபோசிகள் வைத்திருந்ததன் அடிப்படையில் குறித்த கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது

கைது செய்யப்பட்ட நபர் தொடர்பாகவும் கைப்பற்றப்பட்ட தொலைபேசிகள் தொடர்பாகவும் மேலதிகவிசாரணைகள் மன்னார் பொலிஸ் உத்தியோகஸ்தர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.





மன்னார் தாழ்வுபாடு மற்றும் கீரி -24 மேற்பட்ட தொலைபேசிகளுடன் ஒருவர் கைது-படங்கள் Reviewed by Author on May 05, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.