குண்டு தாக்குதல்தாரியின் ஊடக பிரதானி காத்தான்குடியில் கைது
இலங்கை குண்டுத்தாக்குதல்களின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபரின் ஊடக பிரிவின் பிரதானியாக செயற்பட்டு வந்தவர் ஒருவர் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்து குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான நேற்று மாலை பொலிஸார் புதிய காத்தான்குடி 3ஆம் பிரிவு 4ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 38 வயதுடைய முஹமது மன்சூர் முஹமது பைரூஸ் என்பவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் பிரதேசத்தில் உள்ள மருந்தகம் ஒன்றில் கடமையாற்றி வந்துள்ளதுடன் சஹரானின் ஊடக பிரிவின் பிரதானியாக செயற்பட்டு வந்தவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைத்ததாக பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
குண்டு தாக்குதல்தாரியின் ஊடக பிரதானி காத்தான்குடியில் கைது
Reviewed by Author
on
May 02, 2019
Rating:
No comments:
Post a Comment