அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல்.(படம்)

யுத்ததில் முள்ளிவாய்கால் பகுதியில் உயிர் நீத்த   மக்களின் 10 ஆவது வருட  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (18) சனிக்கிழமை கால 11 மணியளவில் மன்னாரில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில், மன்னாரில் உள்ள பொது அமைப்புக்களின் ஒன்றியத்தில் இடம் பெற்றது.

-இதன் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முதலில் உயிர் நீத்த மக்களை நினைவு கூர்ந்து மாலை அனுவித்து,மலர் தூவி,சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

-குறித்த நினைவேந்தல் நிகழ்வில் அருட்தந்தை நவரத்தினம் அடிகளார், இந்து மத குரு தர்ம குமார குருக்கள், ,மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், முன்னாள் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ மாவட்ட அமைப்பாளர் ஏ.ரி.மோகன்ராஜ், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டு முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.











மன்னாரில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல்.(படம்) Reviewed by Author on May 18, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.