அண்மைய செய்திகள்

recent
-

தனியாக அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து உலக சாதனை படைத்தார் இந்தியப் பெண் -


இந்தியாவை சேர்ந்த கேப்டன் ஆரோயி பண்டிட், எடை குறைந்த சிறிய ரக விளையாட்டு விமானம் மூலம் தனியாக அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.

மும்பையை சேர்ந்த ஆரோயி பண்டிட், 2018 யூலை 30ம் திகதி தனது நண்பன் கீதீர் மிசுகிட்டாவுடன் ஓர் ஆண்டு உலக சுற்றுப்பயணத்தை தொடங்கி தொடர்ந்து பறந்து வருகிறார்.
இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக மே 13ம் திகதி மஹி என்ற சிறிய ரக விமானம் மூலம் தனியாக பிரித்தானியாவிலிருந்து புறப்பட்டு ஆரோயி, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து வழியாக அட்லாண்டிக் பெருங்கடலை தாண்டி சுமார் 3000 கி.மீ கடந்து மே 14ம் திகதி கனடாவின் இகாலுட் விமான நிலையத்தில் தரையிறங்கினர்.

இதன் மூலம் சிறய ரக விமானம் மூலம் ஆட்லாண்டிக் பெருங்கடலை கடந்த முதல் பெண்மணி என்ற சாதனையை படைத்துள்ளார் ஆரோயி பண்டிட். மேலும், கிரீன்லாந்து மேல் தனியாக பறந்த முதல் பெண் விமானி என்ற சாதனையையும் ஆரோயி படைத்துள்ளார்.
ஜூலை 30ம் திகதி நாடு திரும்பவுள்ள ஆரோயி மற்றும் கீதீர் மிசுகிட்டா இன்னும் பல சாதனைகளை முறியடிப்பார்கள் என கூறப்படுகிறது.

தனியாக அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து உலக சாதனை படைத்தார் இந்தியப் பெண் - Reviewed by Author on May 16, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.