அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தில்-360kg பீடி சுற்றும் இலைகளுடன் ஒருவர் கைது-படம்

மன்னார் எருக்கலம்பிட்டி 9 ஆம் வட்டார பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 360kg எடை கொண்ட பீடி சுற்றும் இலைகளை மன்னார் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் இன்று சனிக்கிழமை08-06-2019  காலை மீட்டுள்ளதோடு, சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

மன்னார் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்,மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக உதவி பொலிஸ் பரிசோதகர் கங்காபதி ஆர்த்தனன் தலைமையிலான போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் விரைந்து செயற்பட்ட நிலையில், மன்னார் எருக்கலம்பிட்டி 9 ஆம் வட்டார பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனையிட்ட போது 12 மூடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 360 கிலோ கிராம் நிறை கொண்ட பீடி சுற்றும் இலைகளை மீட்டுள்ளதோடு,குறித்த வீட்டில் இருந்த நபர் ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

மீட்கப்பட்ட பீடி சுற்றும் இலைகள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு,மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்கத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தில்-360kg பீடி சுற்றும் இலைகளுடன் ஒருவர் கைது-படம் Reviewed by Author on June 09, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.