அண்மைய செய்திகள்

recent
-

EPRLF-கட்சியின் ஸ்தாபக தலைவர் தோழர் பத்மநாபா அவர்களின் 29 ஆம் ஆண்டு தியாகிகள் தின நினைவு-

ஈழ மக்கள் புரட்சிகர முன்னனியின் ஸ்தாபக தலைவர் தோழர் பத்ம நாபா அவர்களின் 29 ஆண்டு தியாகிகள் தினம் எதிர்வரும் 19 ஆம் திகதி புதன் கிழமை வடக்கு கிழக்கில் மிகவும் அமைதியான முறையில் நினைவு கூறப்பட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் பொருளாளரும்,மன்னார் மாவட்ட அமைப்பாளருமான எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்தார்.

-இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று14-06-2019 கருத்து தெரிவிக்கையில்,,,,

ஈழ மக்கள் புரட்சிகர முன்னனியின் ஸ்தாபக தலைவர் தோழர் பத்ம நாபா அவர்களின் 29 ஆண்டு தியாகிகள் தினம் எதிர்வரும் 19 ஆம் திகதி புதன் கிழமை வடக்கு கிழக்கில் மிகவும் அமைதியான முறையில் நினைவு கூறப்பட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு-கிழக்கும் மற்றும் புலம் பெயர்ந்த நாடுகளில் தியாகிகள் தினம் நினைவு கூறப்படுகின்றமை வழமை.

எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையினை கருத்தில் கொண்டு தியாகிகள் தினமானது வடக்கு கிழக்கில் உள்ள மாவட்டங்கள் தோரும் ஈழ மக்கள் புரட்சிகர முன்னனியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) கட்சியின் அலுவலகங்களில் தோழர்கள், ஆதரவாளர்களை ஒன்றிணைத்து தியாகிகள் தினம் அனுஸ்ரிக்கப்படவுள்ளது.

மாவட்ட பொறுப்பாளர்களின் தலைமையில் ஒவ்வெரு மாவட்டங்களிலும் தியாகிகள் தினம் நினைவு கூறப்படவுள்ளது.

குறித்த தியாகிகள் தின நினைவு நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், வவுனியாவில் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் , கிளிநொச்சியில் கட்சியின் உப செயலாளரும், முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சருமான சர்வேஸ்வரன், மட்டக்களப்பில் கட்சியின் உப தலைவர் துரைரெட்ணம், மன்னாரில் கட்சியின் பொருளாளர் எஸ்.ஆர்.குமரேஸ் ஆகிய நானும் கலந்து கொள்ளவுள்ளோம்.
மாவட்டங்களின் சூழ்நிலைக்கு அமைவாக மாவட்ட அலுவலகங்களில் இடம் பெறும் தியாகிகள் தின நிகழ்வில் கட்சியின் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த அழைப்பு விடுக்கின்றோம்.

உரிமைக்காக அரசியலை முன் நிறுத்தி தமிழ் தேசிய உரிமைகளை வெண்றெடுப்போம் என கோரி அஞ்சலி நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் பொருளாளரும்,மன்னார் மாவட்ட அமைப்பாளருமான எஸ்.ஆர்.குமரேஸ் மேலும் தெரிவித்தார்.




EPRLF-கட்சியின் ஸ்தாபக தலைவர் தோழர் பத்மநாபா அவர்களின் 29 ஆம் ஆண்டு தியாகிகள் தின நினைவு- Reviewed by Author on June 14, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.