அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-அந்தோனிபுர மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு எவரும் கண்டு கொள்ளவில்லை.....

மன்னார் மாந்தை பிரதேச சபைக்குட்பட்ட அந்தோனிபுர மக்கள் தொடர்சியாக தாங்கள் வாழ்வாதாரத்திற்கு கஸ்ரப்படுவதாகவும் எங்களிடம் உழைப்பு முயற்சி இருக்கின்ற போதும் அரச அதிகாரிகளோ பாராளுமன்ற உறுப்பினர்கலோ எவரும் எம்மை கண்டு கொள்வதில்லை என வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கடும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட அந்தோனிபுர மக்கள் மீள் குடியேற்றத்தின் பின்னர் சுமார் 180 க்கு மேற்பட்ட குடும்பங்கள் மீன்பிடியை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு குறித்த கிராமத்தில் குடியேறினர் வறுமை காரணமாக பெண்களும் ஆபத்தான கடல் அட்டை பிடிக்கும் நண்டு ரால் பிடிக்கும் தொழில்களில் ஈடு பட்டு வருகின்றனர்.

ஆனாலும் அண்மைகாலமா மன்னார் மாவட்டத்தில் ஏற்படுகின்ற கடும் வெப்ப வறட்சி காரணமாக கடலுக்கு செல்லும் பிரதான படகு பாதையானது ஆழமற்று படகுகள் கடலுடன் இணைய முடியாத அழவுக்கு நீர் அற்று காணப்படுகின்றது.

இதனால் தாங்கள் தொடர்சியாக ஆல்கடலுக்கு சென்று மீன் பிடிக்க முடியாத நிலை காணப்படுவதாக மக்கள் கவளை தெரிவிக்கின்றனர்
அத்துடன் கடலில் பிடிக்கும் மீன்களை கரைக்கு படகு மூலமாக கொண்டுவர முடியாமையினால் தொழிலும் கிடைக்கப்பெற்ற கடல் உணவுகளை சுமார் 3 கிலோமீற்றருக்கு மேல் தோளில் சுமந்து கரையை அடைய வேண்டிய நிலை காணப்படுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ் பிரச்சினை தொடர்பாக பல முறை அரச அதிகாரிகள் பாரளுமன்ற உறுப்பினர்கள் என அனைவருக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும் இதுவரை யாரும் கண்டு கொள்ளவில்லை எனவும் வெகுவிரைவில் சம்மந்த பட்ட அதிகாரிகள் குறித்த படகு பாதையை சீரமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.



மன்னார்-அந்தோனிபுர மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு எவரும் கண்டு கொள்ளவில்லை..... Reviewed by Author on June 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.