அண்மைய செய்திகள்

recent
-

மைத்திரி எங்களை ஏமாற்றிவிட்டார்! ரணில் முன்னிலையில் மாவை கவலை -


இந்த அரசில் அங்கம் வகிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால கொடுத்த வாக்குறுதிகளை மறந்து தமிழர்களுக்கு துரோகம் செய்து வருகின்றார். எங்களை அவர் ஏமாற்றி விட்டார் என நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

சமுா்த்தி பயனாளிகளுக்கான உாித்து பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று யாழ்.மாநகரசபை மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.
இதன்போதே மாவை சேனாதிராஜா பிரதமா் முன்னிலையில் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றாா்.
இதன்போது மேலும் அ வா் கூறியதாவது,
இலங்கையில் தமிழ் மக்கள் கடந்த 60 வருடங்களாக தொடா்ந்தும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அதேபோல் போா் நிறைவடைந்த 10 வருடங்கள் கடந்துள்ளபோதும் போாினால் அழிக்கப்பட்ட தமிழ் மக்களுடைய பிரதேசங்கள் கட்டியெழுப்பப்படவில்லை.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீா்மானங்கள் தமிழ் மக்களின் எதிா்கால நலன்களை அடிப்படையாக கொண்டே இனி அமையும்.
நாட்டில் போர் முடிவடைந்து பல வருடங்கள் கடந்துள்ள போதும் அவர்கள் மீள முழுமையாக கட்டி எழுப்பபடவில்லை.
தமிழர்கள் விடயத்திலும் இன பிரச்சனை விடயத்திலும் ஆரம்ப காலத்தில் இருந்து இன்றுவரை அரசு எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுக்கவில்லை. தமிழின வரலாற்றில் 60 ஆண்டுகளாக இனப்பிரச்சனை விடயத்தில் ஏமாந்து வருகின்றோம்.

தென்னிலங்கை அரசினால் தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்டு வருகின்றோம். போரின் பின்னர் நடைபெற்ற ஒடுக்குமுறையான ஆட்சியை வீழ்த்தி மைத்திரி ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசினை கொண்டு வந்தோம்.
இந்த அரசில் அங்கம் வகிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால கொடுத்த வாக்குறுதிகளை மறந்து தமிழர்களுக்கு துரோகம் செய்து வருகின்றார். எங்களை அவர் ஏமாற்றி விட்டார்.
நல்லாட்சி அரசில் நீண்டகால பிரச்சனையான இனப் பிரச்சனைக்கு தீர்வாக கொண்டு வரப்பட்ட புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் இடைக்கால அறிக்கை வெளியாகியிருக்கிறது.

பின்னர் பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக கூடவிருந்தது அத்துடன் வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒத்துக்கீடு செய்யப்பட இருந்தது.
அதற்கிடையில் எந்தக் கட்சிகளுடனும் கலந்துரையாடலில் ஈடுபடாது திருட்டுத்தனமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை பிரதமராக கொண்டு வந்தார். இதனால் வரவு செலவுத்திட்டம் உட்பட அனைத்து விடயங்களும் இழுத்தடிக்கப்பட்டன.

தற்போது ஜனாதிபதி இந்தியாவிற்கு சென்றிருந்த சமயம் டெல்லியில் ஊடகவியாளர்கள் மத்தியில் ஆற்றிய உரை எமக்கு வருத்தம் அளிக்கின்றது.
தமிழின வரலாற்றில் நாம் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை வஞ்சிக்கப்பட்டு வருகின்றோம். அண்மையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் கூட அதிகமாக தமிழர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். போரிலும் தமிழர்களே அதிகமாக கொன்று அழிக்கப்பட்டனர்.

நாட்டில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களை அடுத்து சர்வதேச உளவுத்துறை மற்றும் சர்வதேச கண்காணிப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட அரசு தமிழர்களின் அடிப்படை பிரச்சனையான இனப்பிரச்சனை தீர்வில் அரசு அக்கறை செலுத்தவில்லை.
இது எமக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கின்றது. எனவே எதிர்வரும் காலங்களில் எந்த தேர்தல்களிலும் நாம் தமிழர்கள் விடயத்தில் நிதானமாக சிந்தித்து செயற்பட வேண்டிய கட்டாய காலத்தில் உள்ளோம் என்றார்.
மைத்திரி எங்களை ஏமாற்றிவிட்டார்! ரணில் முன்னிலையில் மாவை கவலை - Reviewed by Author on June 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.