அண்மைய செய்திகள்

recent
-

கன்னியா போராட்டத்தின் போது தென் கயிலை ஆதீன முதல்வர் தாக்கப்பட்ட சம்வத்தினை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்...... மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவை கடும் கண்டனம்

கன்னியா போராட்டத்தின் போது தென்கயிலை ஆதீனம் தாக்கப்பட்ட சம்வத்தினை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவை தனது கண்டன அறிக்கயினை வெளியிட்டுள்ளனர்
கன்னியா போராட்டத்தின் போது ஆதீன சுவாமிகள் மீது  தேநீர்  வீசி தாக்குதல் நடாத்திய சம்பவமானது கடும் கண்டனத்திற்குரியது.இந்து.சமயத்திலேஉயர் நிலையில்  இருக்கும் எமது சுவாமி அவர்கள் மீது நடாத்தப்பட்ட இச்சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதோடு.எமது மதத்தின் தலைவர்களுகளுக்குரிய கெளரவத்தினயும் உரிய முறையில் வழங்க வேண்டும் என நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்

 சாத்வீகமான முறையில் கன்னியாவின் தமிழர் பூர்வீகத்தை பாதுகாக்கும் போராட்டத்தை வழிநடத்திய  ஆன்மீக  தலைவர்களில் ஒருவராகிய வணக்கத்துக்குரிய தென் கைலை ஆதீனத்தின் மீது தேநீர் வீச்சினை மேற்கொண்டவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையுமில்லை. என நாம் அறிகின்றோம் இவ் கன்னியா
போராட்டத்தை அகிம்சை முறையில் மேற்கொண்ட மக்களைஅடக்க முற்பட்டு வருகின்றனர்
 அனைவரும் ஒன்றிணைந்து எமது சமய தலைவர்களில் ஒருவரும் தமிழர்களின் பூர்வீக கன்னியாவை மீட்கும் போராட்டத்தின் முதன்மை வழிகாட்டியுமான தென் கயிலை ஆதீன முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளாருக்கு இழைக்கப்பட்ட கொடுஞ் செயலுக்கு நீதி வேண்டும் என.மன்னார் மாவட்ட  இந்துக் குருமார் பேரவை தமது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

கன்னியா போராட்டத்தின் போது தென் கயிலை ஆதீன முதல்வர் தாக்கப்பட்ட சம்வத்தினை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்...... மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவை கடும் கண்டனம் Reviewed by Author on July 19, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.