அண்மைய செய்திகள்

recent
-

அடம்பன் ம.ம.வி பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கலையரங்கம் வைபவ ரீதியாக திறந்து வைப்பு-படம்

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவிற்குற்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கலையரங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை30-07-2019மாலை 6 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அடம்பன் மத்திய மகா வித்தியாலய அதிபர் செ.பி.சேவியர் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம நிறைவேற்று செயலாளர் அ.பத்திநாதன், மற்றும் விருந்தினர்களாக மடு வலயக்கல்வி பணிப்பாளர் க.சத்தியபாலன், பழைய மாணவன் ஜீவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு, பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,பழைய மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது விருந்தினர்களினால் குறித்த கலையரங்கம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டதோடு,கலை நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.





அடம்பன் ம.ம.வி பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கலையரங்கம் வைபவ ரீதியாக திறந்து வைப்பு-படம் Reviewed by Author on July 31, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.