அண்மைய செய்திகள்

recent
-

227 குழந்தைகள் நரபலி... ஆராய்ச்சியாளர்களை அதிரவைத்த சம்பவம் -


உலகிலேயே அதிக நரபலி கொடுக்கப்பட்ட நாடு என அழைக்கப்படும் பெருவில் தற்போது வரை 227 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
பெரு நாட்டின் தலைநகரம் என்று சொல்லப்படும் லிமாவுக்கு வடக்கே உள்ள கடற்கரை பக்க சுற்றுலா நகரமான Huanchaco என்கிற இடத்தில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்து வருகின்றனர்.

இதன்மூலம் கிமு 1475 இல் காணாமல் போன சிமு நாகரிகத்தின் பகுதியை கண்டறிந்து கொள்ளலாம்.
இந்த நிலையில் அங்கு ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் தலைமை தொல்பொருள் ஆய்வாளர் ஃபெரன் காஸ்டிலோ கூறுகையில், கொலம்பியாவிற்கு முந்தைய சிமு கலாச்சாரத்தின் கடவுள்களை கௌரவிக்கும் விதமாக நான்கு முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் ஒரு சடங்கில் பலியிடப்பட்டுள்ளனர்.

இப்பகுதியில் எல் நினோ நிகழ்வு எனப்படும் மோசமான வானிலை முயற்சிக்கவும் தடுக்க அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். பலியிடப்பட்ட குழந்தைகளின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய தளம் இது. ஈரமான வானிலையின் போது கொல்லப்பட்டதற்கான அறிகுறிகள் அங்கு தென்படுகிறன்றன.

எல் நினோ, அதாவது ஸ்பானிஷ் மொழியில் சிறுவன் அல்லது தி கிறிஸ்ட் சைல்ட் என கூறப்படுகிறது. பசிபிக் பெருங்கடலில் அசாதாரணமாக வெப்பமடைவதை உள்ளடக்கிய ஒரு காலநிலை மாற்ற முறை.
19 ஆம் நூற்றாண்டில் மீனவர்கள் கிறிஸ்துமஸ் நேரத்தில் நீர் வெப்பமடைவதைக் கவனித்தபோது இந்த வார்த்தையைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

இந்த நிகழ்வு ஈக்வடார் முதல் சிலி வரை மீன்பிடித்தல், விவசாயம் மற்றும் உள்ளூர் வானிலை ஆகியவற்றில் ஏற்படும் மோசமான விளைவுகளுடன் தொடர்புடையது.
எல் நினோ ஒழுங்கற்ற முறையில் நிகழ்கிறது. அலைகள் போன்ற பிற வானிலை முறைகளைப் போலவே கணிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
227 குழந்தைகள் நரபலி... ஆராய்ச்சியாளர்களை அதிரவைத்த சம்பவம் - Reviewed by Author on August 29, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.