அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகர சபை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்...படங்கள்

மன்னார் நகரசபை சுத்திகரிப்பு தொழிளாலர்கள் சாரதிகள் உட்பட மன்னார் நகரசபையின் கீழ் தொழில்புரியும் ஊழியர்கள் இன்று காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அடையாள கவயீர்பு போராட்டம் ஒன்றை முன்னேடுத்துள்ளனர்

மன்னார் நகரசபையின் கீழ் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் 44 ஊழியர்களுக்கு கடந்த 2003 ஆண்டு மன்னார் ஜீவபுரம் பகுதியில் முன்னைனால் பிரதேச செயளாலரினால் காணி வழங்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு காணி துண்டுகளுக்கான படமும் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட நிலையில் 15 வருடங்கள் ஆகியும் இதுவரை குறித்த துப்பரவு பணியாளர்களுக்கு குறித்த காணிகளுக்கான உறுதிபத்திரமே அல்லது வீட்டுத்திட்டமோ அடிபடைவசதிகலோ இதுவரை செய்யப்ப்டவில்லை எனவும் தாங்கள் தாழ்தப்பட்டவர்கள் என்ற அடிபடையில் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுவதாகவும் சுத்திகரிப்பு தொழிளாலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக உரிய அதிகாரிகளை சந்திக்க முற்படுகின்றபோதும் அவர்களை சந்திக்க முடியாமல் வெளியேற்றப்படுகின்றோம் என தொடர்ந்து தெரிவிக்கின்றனர்

எனவே தங்களது நிலையை கவனத்தில் கொண்டு தங்களின் நியாயமான கோரிக்கைகளான 2003 ஆம் ஆண்டு காணிகள் வழங்கப்பட்ட 44 பேருக்கும் காணி உறுதி பத்திரங்களை உடன் வழங்கவேண்டும்

அளவீடு செய்து ஒதுக்கப்பட்ட காணிகளை பிறருக்கு வழங்குவது உடன் நிறுத்தப்படல் வேண்டும்

காணிக்கு புதிதாக விண்ணப்பித்துள்ள 15 சுத்திகரிப்பு தொழிளாலர்களுக்கும் காணிகள் உடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

காணி வழங்கப்பட்ட தொழிளாலர்களுக்கு வீட்டுதிட்டம் மலசலகூடம் மின்சாரம் மற்றும் நீரிணைப்பு கிடைக்க உரிய நடவடிகை எடுக்க வேண்டும்

என்ற அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றிதர நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதுடன் குறித்த கோரிக்கைகள்  அடங்கிய மகஜர்களும் இன்றையதினம் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர்களுக்கும் கையளிக்கப்படவுள்ளது.








மன்னார் நகர சபை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்...படங்கள் Reviewed by Author on August 01, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.