மன்னார்-கரிசல் கப்பலேந்தி மாதா ஆலய திருவிழா-படங்கள்
மன்னார் மறைமாவட்டத்தில் கரிசல் பங்கின் பாதுகாவலியாம் கப்பலேந்தி மாதா ஆலயத்தின் திருவிழா ஞாயிற்றுக் கிழமை (08.09.2019) பங்கு தந்தை அலெக்ஸ்சாண்டர் பெனோ அடிகளார் தலைமையில் நடைபெற்றபோது மன்னார் மறைமாவட்டத்தின் தூய ஜோசப்வாஸ் இறையியல் கல்லூரி அதிபர் அருட்பணி P.F.டெஸ்மன் குலாஸ் தலைமை தாங்கி திருவிழா திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.
அத்துடன் திருச்சுரூப பவனியைத் தொடர்ந்து திருச்சுரூப ஆசீரையும் அருட்பணி P.F.டெஸ்மன் குலாஸ் இறைமக்களுக்கு வழங்கினார்.
இத்துடன் அன்றையத் தினம் தேவ அன்னையின் பிறந்த தினத்தை உலகத்
திருச்சபையானது கொண்டாடி வருவதை முன்னிட்டு கரிசல் அன்னையின் ஆலயத்திலும் அருட்பணியாளர் கேக் வெட்டி சிறுவர்களுக்கு கேக் பரிமாறிய நிகழ்வும் இடம்பெற்றது.
இது இவ்வாறு இருக்க நேற்றைத் தினம் தேவ அன்னையின் பெருவிழாவாக கத்தோலிக்க திருச்சபை கொண்டாடியதையிட்டு அன்றையத் தினத்தை மன்னார் மறைமாவட்டத்திலுள்ள அணைத்து ஆலயங்களிலும் எம் இலங்கை நாட்டையும் ஒவ்வொரு குடும்பங்களையும் பங்கையும் அன்னைக்கு விஷேடமாக ஒப்புக்கொடுக்குமாறு மன்னார் ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மன்னார் மறைமாவட்ட இறை
மக்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய அணைத்து ஆலயங்களிலும் இதற்கான விஷேட இறை வேண்டுதலும் செபிக்கப்பட்டன.
அத்துடன் திருச்சுரூப பவனியைத் தொடர்ந்து திருச்சுரூப ஆசீரையும் அருட்பணி P.F.டெஸ்மன் குலாஸ் இறைமக்களுக்கு வழங்கினார்.
இத்துடன் அன்றையத் தினம் தேவ அன்னையின் பிறந்த தினத்தை உலகத்
திருச்சபையானது கொண்டாடி வருவதை முன்னிட்டு கரிசல் அன்னையின் ஆலயத்திலும் அருட்பணியாளர் கேக் வெட்டி சிறுவர்களுக்கு கேக் பரிமாறிய நிகழ்வும் இடம்பெற்றது.
இது இவ்வாறு இருக்க நேற்றைத் தினம் தேவ அன்னையின் பெருவிழாவாக கத்தோலிக்க திருச்சபை கொண்டாடியதையிட்டு அன்றையத் தினத்தை மன்னார் மறைமாவட்டத்திலுள்ள அணைத்து ஆலயங்களிலும் எம் இலங்கை நாட்டையும் ஒவ்வொரு குடும்பங்களையும் பங்கையும் அன்னைக்கு விஷேடமாக ஒப்புக்கொடுக்குமாறு மன்னார் ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மன்னார் மறைமாவட்ட இறை
மக்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய அணைத்து ஆலயங்களிலும் இதற்கான விஷேட இறை வேண்டுதலும் செபிக்கப்பட்டன.
மன்னார்-கரிசல் கப்பலேந்தி மாதா ஆலய திருவிழா-படங்கள்
Reviewed by Author
on
September 08, 2019
Rating:
No comments:
Post a Comment