அண்மைய செய்திகள்

recent
-

சம்மாந்துறையில் காட்டுயானைகள் தாக்குதலில் ஒருவர் காயம்-உடமைகளும் சேதம்-படங்கள்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கல்லிரைச்சல் பகுதியில்  காட்டு யானைகள் பொதுமக்கள்  வசிக்கும் பகுதிகளில் திடிரென தாக்குதல் நடாத்தியுள்ளன.

செவ்வாய்க்கிழமை (3) காலை இவ்வாறு   உள்நுழைந்த யானை கூட்டங்கள் அங்குள்ள  சுவர்களை உடைத்தும்  வீடுகள்  உடமைகளுக்கு கடும்  சேதங்களை ஏற்படுத்தி தப்பி சென்றுள்ளன.

மேலும்   அங்கு வசிக்கும் ஏ.அமீர் என்ற நபர் மீது யானை தாக்குதலை நடாத்தி வீட்டின் உடமைகளுக்கு சேதத்தை ஏற்றபடுத்தியது .

இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான  நபர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை சம்மாந்துறை மஸ்ஜிதுல் சலாம் ஜும்மா பள்ளிவாசல் மதிலினையும் சேதப்படுத்தியுள்ளது .

இது தொடர்பாக பொதுமக்கள்   கருத்துக்களை தெரிவிக்கையில் குறிப்பாக இவ் யானை அடிக்கடி எங்கள் பிரதேங்களுக்கு வருகின்றன
 இதனால் எங்களுக்கு அச்ச நிலை காணப்படுகிறது  சொத்துக்களுக்கு சேதங்கள்  இடம்பெறுகின்றது   .இது விடயத்தில் உரிய அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை மேற்க்கொண்டு எங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த   வேண்டும் என்றனர்.இது தவிர கடந்த சில தினங்களுக்கு முன்னரும் நிந்தவூர் பகுதிகளிலும் யானைகள் தாக்குதல் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






சம்மாந்துறையில் காட்டுயானைகள் தாக்குதலில் ஒருவர் காயம்-உடமைகளும் சேதம்-படங்கள் Reviewed by Author on September 04, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.