அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சர்வமத குழு மற்றும் அரசியல் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல்


தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் இன மத மொழி பண்மைத்துவம் அதிகமாக காணப்படும் பகுதியில் முரண்பாடுகள் தோற்றம் பெறாமல் அனவரும் பொருப்புடன் செயற்படும் நோக்கில் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள மத ரீதியான முரண்பாடுகளை கலந்துரையாடல் மூலம் தீர்த்துக்கொள்வதற்கான விசேட நிகழ்வு மன்னார் மாவட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் மன்னார் சர்வ மத குழுவினருக்கு இடையில் இன்று காலை 10 மணிக்கு தேசிய சமாதாமன பேரவையின் திட்ட அதிகாரி திரு.உவைஸ் தலைமையில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் மத ரீதியான முரண்பாடுகள் தோற்றம் பெறும் போது மத தலைவர்கள் கிராம அலுவலர்கள் சமுதாய பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அரசியல் வாதிகள் என அனைவரினதும் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பாகவும் மத இன ரீதியான முரண்பாடுகள் தோற்றம் பெறாமல் இருப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

குறித்த நிகழுவிற்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சாள்ஸ் நிர்மலநாதன் தமிழரசு கட்சியின் இளைஞர் அணி உபதலைவர் சட்டதரணி டினேஸன் மற்றும் மன்னார் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகஸ்தர் திரு.ராதா பெர்னாண்டோ உட்பட மன்னார் மாவட்டத்தில் உள்ள மும் மத தலைவர்கள் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களின் கிராம சேவகர்கள் மற்றும் மத நல்லிணக்க குழு அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.





மன்னார் சர்வமத குழு மற்றும் அரசியல் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் Reviewed by Author on September 10, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.